பூண்டி அரங்கநாத முதலியார்
Appearance
அரங்கநாத முதலியார் என்னும் தமிழறிஞர் 1837 ஆம் ஆண்டில் பூண்டியில் பிறந்தார்.[1] எனவே பூண்டி அரங்கநாத முதலியார் என அழைக்கப்பட்டார்.

கல்வி
[தொகு]கணிதத்தில் கலை முதுவர் பட்டம் (Master of Arts in Mathematics) பெற்றார்.[1]
பணி
[தொகு]பெல்லாரி மாவட்டப் பள்ளி (Bellary Provincial School), கும்பகோணம் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் கணிதப் பேராசிரியராகவும் சென்னை மாகாண நிர்வாகத்தால் ஏற்பளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.[2]
பட்டம்
[தொகு]ஆங்கில அரசாங்கத்திடம் திவான் பகதூர் பட்டம் பெற்றவர்.[1]
இயற்றிய நூல்
[தொகு]கச்சிக் கலம்பகம் என்னும் நூலை இயற்றினார்.[1]