புதிய உலகம் (நாயகி துனியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாயகி துனியா (Naiki Duniya)(மொழிபெயர்ப்பு : புதிய உலகம்) என்பது 1942-ல் ராகுல சாங்கிரித்யாயனால் எழுதப்பட்ட போச்புரி நாடகமாகும்.[1][2] இது உலகப் போரின் போது ராகுல் சாங்கிரித்யாயன் ஹசாரிபாக் சிறையிலிருந்தபோது எழுதப்பட்டது.இந்நாடகம் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இது பொதுவுடைமை கருத்தை ஊக்குவிக்கிறது.[3] இந்த நாடகத்தில், அனைவரும் சமம் என்றும், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரும் உழைப்பாளிகளை வணங்கும் பொதுவுடைமைச் சமுதாயம் கற்பனை செய்யப்பட்டுள்ளது. தேவையான அனைத்து வசதிகளுடன் கிராமம் முழுமையாக வளர்ச்சியடையும் என்பது இந்த திரைப்பட மையக்கருத்தாகும்.[2]

கதாபாத்திரங்கள்[தொகு]

  • பாதுக்: முக்கிய கதாபாத்திரம் [4]
  • சோனா: பாதுக்கின் மனைவி
  • ராம்தானி: பாதுக்கின் தந்தை
  • ஜாக்ராணி: பாதுக்கின் பாட்டி
  • ராம்தியோ சிங்: முதியவர்
  • ராமேசர் திவாரி: வயதான பிராமணர்
  • குசாரி: சர்பஞ்ச்
  • மற்ற கதாபாத்திரங்கள்: சுகருல்லா, விஸ்னுடியோ பர்சாத், சுகியா, பதுலியா, மக்தேய் [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pathak, Sunil Kumar. Chhavi Aur Chhap. Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789383110490. 
  2. 2.0 2.1 Ray, Madan. Rahul Ke katha ka Samajika Sandarbh. Radhakrishna Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788171192717. 
  3. Tiwari, Udaynarayan. Bhojpuri Bhasa aur Sahitya. Bihāra-Rāshtrabhāshā Parishad. 
  4. Gaṛabaṛa, Śaṅkara Muni Rāya (2001). Bhojpuri Sahitya me Hasya Vyang. Pankaj Books. 
  5. Gaganāñcala, Volume 16. Bhāratīyah Sāṃskr̥tika Sambandha Parishad. 1993.