புதிய உலகம் (நாயகி துனியா)
நாயகி துனியா (Naiki Duniya)(மொழிபெயர்ப்பு : புதிய உலகம்) என்பது 1942-ல் ராகுல சாங்கிரித்யாயனால் எழுதப்பட்ட போச்புரி நாடகமாகும்.[1][2] இது உலகப் போரின் போது ராகுல் சாங்கிரித்யாயன் ஹசாரிபாக் சிறையிலிருந்தபோது எழுதப்பட்டது.இந்நாடகம் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இது பொதுவுடைமை கருத்தை ஊக்குவிக்கிறது.[3] இந்த நாடகத்தில், அனைவரும் சமம் என்றும், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரும் உழைப்பாளிகளை வணங்கும் பொதுவுடைமைச் சமுதாயம் கற்பனை செய்யப்பட்டுள்ளது. தேவையான அனைத்து வசதிகளுடன் கிராமம் முழுமையாக வளர்ச்சியடையும் என்பது இந்த திரைப்பட மையக்கருத்தாகும்.[2]
கதாபாத்திரங்கள்[தொகு]
- பாதுக்: முக்கிய கதாபாத்திரம் [4]
- சோனா: பாதுக்கின் மனைவி
- ராம்தானி: பாதுக்கின் தந்தை
- ஜாக்ராணி: பாதுக்கின் பாட்டி
- ராம்தியோ சிங்: முதியவர்
- ராமேசர் திவாரி: வயதான பிராமணர்
- குசாரி: சர்பஞ்ச்
- மற்ற கதாபாத்திரங்கள்: சுகருல்லா, விஸ்னுடியோ பர்சாத், சுகியா, பதுலியா, மக்தேய் [5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Pathak, Sunil Kumar. Chhavi Aur Chhap. Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789383110490.
- ↑ 2.0 2.1 Ray, Madan. Rahul Ke katha ka Samajika Sandarbh. Radhakrishna Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788171192717.
- ↑ Tiwari, Udaynarayan. Bhojpuri Bhasa aur Sahitya. Bihāra-Rāshtrabhāshā Parishad.
- ↑ Gaṛabaṛa, Śaṅkara Muni Rāya (2001). Bhojpuri Sahitya me Hasya Vyang. Pankaj Books.
- ↑ Gaganāñcala, Volume 16. Bhāratīyah Sāṃskr̥tika Sambandha Parishad. 1993.