புட்பவனம் சுகந்தவன ஈசுவரசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புட்பவனம் சுகந்தவன ஈசுவரசுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் வேதாரண்யத்திற்கு வடக்கில் 10 கிமீ தொலைவிலும், கள்ளிமேடுக்குத் தென்கிழக்கில் 4 கிமீ தொலைவிலும், நாலுவேதபதிக்குத் தெற்கில் 6 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

மணமிக்க புட்பவனத்தில் உள்ளதால் இங்குள்ள மூலவர் சுகந்தவன ஈசுவரசுவாமி ஆவார். இறைவி தேன்மொழியாள் என்றும் மதுரபாஷினி என்றும் அழைக்கப்படுகிறார்.[1]

சிறப்பு[தொகு]

இராமர் சீதையைத் தேடிச் சென்றபோது வேதாரண்யம் செல்லும் வழியில் இங்குள்ள சுகந்தவனநாதரை வணங்கிவிட்டுச் சென்றதைத் தல புராணம் மூலமாக அறியமுடிகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்[தொகு]