பா. செயப்பிரகாசம் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பா. செயப்பிரகாசம் கதைகள்
நூலாசிரியர்பா. செயப்பிரகாசம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைசிறுகதைத் தொகுப்பு
வெளியீட்டாளர்சந்தியா பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2007
பக்கங்கள்1184

பா. செயப்பிரகாசம் கதைகள் முழுமையான தொகுப்பு எனும் இப்புத்தகம் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாகும். சந்தியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது. 1184 பக்கங்கள் கொண்ட இந்நூலின் முதற்பதிப்பு 2007 ஆம் ஆண்டு வெளியானது. காணிக்கை தோழர் சின்னப்பன் அவர்களுக்கு என இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நூலிலுள்ள சிறுகதைகள் ஒரு ஜெருசலேம், காடு, இரவுகள் உடையும், மூன்றாவது முகம், புதியன, இரவு மழை, புயலுள்ள நதி, பூத உலா மற்றும் கள்ளழகர் ஆகிய 9 தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.

தொகுப்பிலுள்ள சிறுகதைகள்[தொகு]

  • ஒரு ஜெருசலேம்
    • ஒரு ஜெருசலேம்
    • அம்பலக்காரர் வீடு
    • குற்றம்
    • பலிப்பூக்கள்
    • கறுத்த சொப்னம்
    • ஆறு நரகங்கள்
    • புஞ்சைப் பறவைகள்
    • இருளின் புத்ரிகள்
    • திறக்கப்படாத உள்ளங்கள்
    • வேரில்லா உயிர்கள்
    • சுயம்வரம்
    • மூன்றாம் பிறையின் மரணம்
    • பொய் மலரும்
  • காடு
    • காடு
    • இருளுக்கு அழைப்பவர்கள்
    • கொசு வலைக்குள் தேனீக்கள்
    • முதலைகள்
    • நிஜமான பாடல்கள்
    • சரஸ்வதி மரணம்
    • இரவின் முடிவு
    • குஷ்டரோகிகள்
    • விடிகிற நேரங்கள்
    • கோபுரங்கள்
    • அக்னி மூலை
    • தாலியில் பூச்சூடியவர்கள்
    • கரிசலின் இருள்கள்
    • அக்னி நட்சத்திரம்
    • தூரத்துப் பாலைவனம்
    • ஒரு கிராமத்து ராத்திரிகள்
    • தெற்கின் ஆத்மாக்கள்
  • இரவுகள் உடையும்
    • அனல் காற்று
    • தூரத்துத் தண்ணீர்
    • வளரும் நிறங்கள்
    • தீர்வு
    • சூரியன் உதிக்கும் வீடு
    • பிணந்தின்னிக்அள்
    • இரவுகள் உடையும்
    • நெருப்பு வெள்ளமும் சுல்தான்களும்
  • மூன்றாவது முகம்
    • மூன்றாவது முகம்
    • சாதி
    • பால்ராஸு மெறாஸுக்குப் போனான்
    • கோயில் மாடு
    • அவர்கள் வருகிறார்கள்
    • கடிநாய்
    • உதிரிவிதை
    • சவ ஊர்வலம்
    • ஒரு இந்திய மரணம்
    • வேர்ப்புழுக்கள்
  • புதியன
    • புதியன
    • இழிவு
    • ஒரு தியாகி
    • கிராமத்துக் குறிப்புகள்
    • சாவு அல்ல
    • தொடக்கம்
    • சிறை மீட்பு
  • இரவு மழை
    • சிகரம்
    • மலரடி வளைவு
    • நசிவு
    • கந்தக பூமி
    • முரண்
    • கலைமணி
    • ஒடுக்கம்
    • சிறகு முறியும் திசை
    • எருது கட்டு
    • பனை நிழலில் வாழ்க்கை
    • பறவை
    • இரவு மழை
    • உருவாக்கம்
    • நீளும் கண்டம்
    • பதுங்கு குழி
  • புயலுள்ள நதி
    • எதையும் செய்வீர்
    • காணாத பாடல்
    • காற்றில்லாக் கூடுகள்
    • மயான காண்டம்
    • சுதந்திர நேரம்
    • புயலுள்ள நதி
    • நிலவின் சடலம்
    • மலையாட்டி
    • மயானத்தின் மீது
    • மகன்
    • எண்
    • ஔவையார் தெரு
  • பூத உலா
    • இரவுக் காவலன்
    • சிங்கம்
    • மூளைக் காய்ச்சல்
    • சார்பு
    • இரண்டாவது மனிதன் (குறு நாவல்)
    • சோக நீக்கம்
    • தேனமுதம்
    • பூத உலா
    • ஒரு மரனத்தின் கடைசிக் குறிப்புகள்
  • கள்ளழகர்
    • ஆட்டம்
    • சாமியார் மடம்
    • பூக்கள்
    • இருட்டுப் பச்சை
    • கள்ளழகர்
    • விஷக்கடி
    • கொடை

பின்னட்டைக் குறிப்புகள்[தொகு]

இந்நூலின் பின்னட்டையில் காணப்படும் குறிப்புகள்:

வானம் பார்த்த பூமியான இந்தக் கரிசல் மன்ணின் துயர கீதத்தை இசைக்கும்போது எங்களுக்குத் தாங்க முடியாத துக்கம் செஞ்சை அடைக்கும். இந்த மக்களைப் பற்றி இதுவரை நாங்கள்
சொல்லியதெல்லாம் விட இன்னும் சொல்லாததே அதிகம் இருக்கிறது. பா. செயப்பிரகாசத்தின் எழுத்தில் என்னை ரெம்பவும் கவர்ந்தது, அவருடைய கவித்துவ நடை அதைப் பல இடங்களில்
படிக்கும் போது ஐயோ நமக்கு இப்படி எழுத வரமாட்டேங்குதே என்று நினைப்பேன்.. -கி. ராஜநாராயணன்
அன்று தொடங்கி இன்று வரை மொழி, தேசியம், வர்க்கம், சாதி, பாலியல் என்று எதுவானாலும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே சார்ந்து போதல் என்ற உண்மைக் கலைஞனுக்கே உரிதான 
உளவியலைச் சிந்திச் சிதறவிடாமல் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் இரு பத்திரிகையை (மன ஓசை) நடத்துவதற்காக தனது படைப்பாக்க மனநிலையையே தாரை
வார்த்திருக்கிறார். -பேராசிரியர் க. பஞ்சாங்கம்

வெளி இணைப்புகள்[தொகு]