பவர் ரேஞ்சர்ஸ் லைட்ஸ்பீடு ரெசியூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவர் ரேஞ்சர்ஸ் லைட்ஸ்பீட் ரெசியூ (Power Rangers Lightspeed Rescue) ஒரு பவர் ரேஞ்சர்ஸ் தொடராகும். பவர் ரேஞ்சர்களின் அடையாளம் பொதுமக்களுக்கு தெரிவது போல அமைந்த முதல் பவர் ரேஞ்சர்ஸ் தொடராகும்.

கதை சுருக்கம்[தொகு]

அரக்கர்களின் கல்லறைக்கு மேல் மரைனர் பே என்னும் கற்பனை நகரம் அமைந்துள்ளது. அந்த கல்லறையைத் திறந்துவிட தீய சக்திகள் அதிலிருந்து தப்புகின்றன. தப்பித்த அரக்கர்கள் மரைனர் பே நகரத்திற்கு அச்சுறுத்தலாக அமைகின்றனர். எனவே கேப்டன் மிட்செல் பல்துறைகளில் திறன்வாய்ந்த ஐந்து நபர்களை ரேஞ்சர்களாக தேர்ந்து எடுக்கிறார். இறந்துவிட்டான் என கருதப்பட்ட கேப்டன் மிட்ச்செலின் மகன் ஆறாவது ரேஞ்சராக சேர்ந்துக்கொள்ள அவர்கள் நகரத்தை எப்படி அரக்கர்களிடம் இருந்து காக்கிறார்கள் என்பதே தொடரின் கதை.