பயனர் பேச்சு:Manikandan artist

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Manikandan artist, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சிவகோசரன் (பேச்சு) 16:32, 14 சனவரி 2022 (UTC)[பதிலளி]

மணிகண்டன் ஓவியர்[தொகு]

கலைஞர்களின் வாழ்வு கவலை நிறைந்தது. எல்லோரும் நக்கீரர் போல் வரகுண பாண்டியனின் தங்க அவையில் வீற்றிருப்பதில்லை. தருமி போல் வாசலில் காத்திருப்போரும் உண்டு. அது திறமைக்கு கிடைத்த மரியாதை. ஆனால் இன்றோ கலைஞர்கள் திறமையினால் மதிக்கப்படுவதில்லை. அவர்களின் பின்புலமும் நோக்கப்படுகிறது. மரத்திலிருந்து மெல்ல இறங்கும் சறுகை பார்த்து இயற்கையின் எழிலை கொஞ்சும் கலைஞன் இறைவன் இந்த பூமிக்கு அளித்த பரிசாகும். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் என்னும் கிராமத்தை சேர்ந்த இளம் ஓவியர் மணிகண்டன் இவர் கலைத்துறையில் அரசு கலை ரத்னா விருது, சர்வதேச கலைதிலகம் விருது பேன்ற 20திற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார் என்பதோடு மட்டுமல்லாது மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஓவியர் மணி

பெற்ற விருதுகளும் பாராட்டுகளும்



ஒவ்வொருவரின் மனதிலும் விதவிதமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றில் ஒரு சிலரது எண்ணங்கள் மட்டும் படைப்புகளாக வெளி வருகின்றன. அனைத்து வசதிகள் இருந்தும், பலவித பயிற்சிகள் கொடுத்தும் அவர்கள் சாதனையாளர்களாக மாறுவதில்லை. ஆனால், குக்கிராமங்களில் உடுக்க உடையும், உண்ண உணவும் இன்றி பசியுடன் வாழும் ஏழை எளிய மக்களிடம் ஏராளமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. இவற்றில் சில மட்டும் வெளி உலகிற்கு தெரிய வருகிறது. தனது வறுமையை பொருட்படுத்தாமல் ஓவியத்தில் சாதனை புரிவது ஒன்றே குறிக்கோள் என பல்வேறு படைப்புகளை படைத்து, சாதனைகளுக்கு சொந்தகாரராக மாறி கொண்டிருக்கும் இளம் ஓவியர் மணிகண்டனின் நிலை இன்று வறுமைபிடியில் உள்ளது வருந்ததத்தக்கது.


இவருக்கு சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. சிறு வயதிலே தந்தையை இழந்த இந்த ஓவியர், கோட்டோவியம், பென்சில் ஓவியம், நீர்வண்ண ஓவியம், அகர்லிக், ஆயில் பெயிண்டிங், சுவர் ஓவியம், தத்ரூப ஓவியம் போன்ற அனைத்து விதமான ஓவியங்களிலும் கைதேர்ந்தவர். ஓவியம் வரைவது மட்டுமன்றி அடுத்தவர்களுக்கு இதனை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் ஓவிய ஆசிரியர் பயிற்சியும் முடித்தார். தான் கடந்து வந்த பாதையில் அடிப்படை இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி அளித்து வந்தார். இதனைப் பாராட்டி இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன. தற்போது கலைத்துறையில் 20க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் வரையும் ஓவியங்கள் அனைத்தும் மிகவும் தத்ரூபமாக இருக்கும், இதனைப் பாராட்டி கலை பண்பாட்டுத்துறை, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் போன்றவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.








கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒற்றுக் கொள், எத்தொழில் எதுவும் தெரியாமல் இருந்திடல் உனக்கே சரியாமோ' என்றார் நாமக்கல் கவிஞர் ஆனால், பேரையூர் ஓவியர் மணிகண்டனுக்கு அவர் கற்றறிந்த ஓவியக்கலை பசியை போக்கவில்லை மாறாக வறுமையை தந்துள்ளது. இவருடைய ஓவியத் திறமையைப் பாராட்டி பல்வேறு விருதுகளும் பாராட்டுப் பத்திரங்கள் கிடைத்தாலும் பசி போக்க ஒரு பணி கிடைக்கவில்லை. எத்தனையோ அரசு பள்ளிகளில் ஓவிய பயிற்சி ஆசிரியர்கள் வேலை காலியாக உள்ள நிலையில், இவருக்கு ஒரு அரசுப் பள்ளியில் பணி நியமன உத்தரவை அரசு பிறப்பித்தால் இவரது வாழ்வு வளம் பெறும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. எந்த துறையாக இருந்தாலும், வெளி உலகில் மிகவும் புகழ்பெற்றவர்களைப் பற்றி மட்டுமே இந்த உலகம் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர் போன்ற இளம் ஓவியர்கள் அதீத திறமை இருந்தும் பிரபலம் அடையாததால் வறுமையும் பசியும் இவரை துரத்துகிறது திறமையுள்ள இளைஞர்களை இந்த உலகம் அங்கீகரிக்க வேண்டும். Manikandan artist (பேச்சு) 18:34, 25 மார்ச் 2022 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Manikandan_artist&oldid=3764081" இலிருந்து மீள்விக்கப்பட்டது