பத்மினி ராஜமாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்மினி ராஜமாணிக்கம் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு பத்திரிகையாளருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1979 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், புதுக் கவிதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • பத்திரிகையாளர்களுக்குச் சுற்றுச் சூழல் அமைச்சு நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு
  • தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு
  • தமிழ் நேசன் சிறுகதைப் போட்டியில் பரிசு
  • நவீன இலக்கியச் சிந்தனை புதுக்கவிதைப் போட்டியில் பரிசு
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்தரச் சிறுகதைத் தேர்வுப் பரிசு
  • செம்பருத்தி இதழின் குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு (2002).

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மினி_ராஜமாணிக்கம்&oldid=3219623" இலிருந்து மீள்விக்கப்பட்டது