நாயகி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாயகி தேவி
துணைவர்அஜயபாலன்
குழந்தைகளின்
பெயர்கள்
இரண்டாம் மூல ராஜா
அரசமரபுசந்தேல வம்சம் (பிறப்பால்)
சோலங்கி வம்சம் (திருமணம் மூலம்)
தந்தைபரமார்த்தி (சந்தேல வம்சம்)
தாய்மல்கணா பிரதிகாரா
மதம்இந்து சமயம்

ராணி நாயகி தேவி ( Naiki Devi ) என்பவர் சோலங்கி வம்சத்தின் ராணியாக இருந்தார். இவர் 1175 ஆம் ஆண்டு முதல் தனது மகன் இரண்டாம் மூலராஜாவின் குழந்தைப் பருவத்தில் சோலங்கி வம்சத்தின் (சோலங்கி இராஜபுத்திரர்கள்) ஆட்சி பிரதிநிதியாக இருந்தார். [1] [2] . இவர் சந்தேல மன்னன் பேரரசர் பரமார்த்தியின் குடும்பத்தில் பிறந்திருக்கலாம். [3] இவர் சௌளுக்கிய மன்னன் அஜயபாலனை மணந்தார் . [3] 1178 இல், ராணி நாயகி தேவி இராஜ்புத்திர கூட்டமைப்பைக் கசக்ரடா போரில் வழிநடத்தி, கோரி முகமதுவை கதாராராகதக் கணவாயில் தோற்கடித்தார். கோரி முகமது இந்தப் போரில் தோல்வியடைந்த பிறகு பாலைவனம் வழியாக ஆப்கானித்தானுக்கு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [4]

வாழ்க்கை[தொகு]

மெருதுங்காவின் பிரபந்தசிந்தாமணியின் கூற்றுப்படி இவருடைய முந்தைய வாழ்க்கை தெரியவில்லை. இவர் பரமார்த்தி மன்னன் ஒருவரின் மகள். இந்த பரமார்த்தி முன்பு கதம்ப மன்னர் பெர்மாதிதேவன் என்று தவறாக ஊகிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியர் அசோக் குமார் மஜும்தாரின் கூற்றுப்படி, அவர் சந்தேலப் பேரரசர் பரமார்த்தியின் மகளாக இருக்கலாம் [3] (கி.பி. 1165-1203 பொ.ச.).

இவர் சோலங்கிய ஆட்சியாளரான அஜயபாலனை மணந்தார். இவர்களுக்கு மூலராஜா என்ற மகன் பிறந்தார். பின்னர் மூலராஜா தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரசரானார். மூலராஜா 1175-இல் அரசனானபோது உரிய வயது அடையாத காரணத்தால் நாயகி தேவி தனது மகனுக்கு ஆட்சியாளராக இருந்தார்.

தனது மகனின் குழந்தைப் பருவத்தில், நாயகி தேவி சோலங்கியப் பேரரசின் ஆட்சியாளராக இருந்தார். அந்த நேரத்தில்தான் கோரி முகமது பொ.ச. 1178-இல் தார்ப் பாலைவனம் வழியாக இந்தியா மீது படையெடுத்தார். வரலாற்றாசிரியர் மெருதுங்கா வழங்கிய விரிவான விளக்கத்தில், நாயகி தேவி தனது மகன் மூலராஜாவை மடியில் எடுத்துக்கொண்டு சோலங்கிப் படையின் தலைமையில் அணிவகுத்துச் சென்று, கதாராராகதக் கணவாயில் கோரி படைகளைத் தோற்கடித்து, தனது மகனுக்கு "கஜினி மன்னனை வென்றவர்" என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தார். போரின் இடம் அபு மலையின் அடிவாரத்தில் உள்ள காயந்த்ரா என்ற கிராமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. [5] [6] [7] [8]

சான்றுகள்[தொகு]

  1. Hermann Kulke (2004). A History of India (in ஆங்கிலம்). Psychology Press. p. 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-32919-4. When Gurjara Pratiharas power declined after sacking of Kannauj in early tenth many Rajput princes declared their independence and founded their own kingdoms,some of which grew to importance in next two centuries. The better known among these dynasties were Chaulukyas or Solankis of Gujarat and Kathiawar. The Chahamanas or Chauhans of eastern Rajasthan and Jodhpur
  2. David Ludden (2013). India and South Asia: A Short History (in ஆங்கிலம்). Simon and Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78074-108-6. இதற்கு நேர்மாறாக, இராஜஸ்தானில் ராஜ்புத் (ராஜபுத்திரன்-அரசர்களின் மகன்) என்று அழைக்கப்படும் ஒரு போர்வீரர் குழு உருவானது. அவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவது அரிதாகவே இருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டில் ராஜபுத்திரர்களான சஹாமனாக்கள் (சௌஹான்கள்), பரமரர்கள் (பவார்கள்), குஹிலாக்கள் (சிசோதியர்கள்) மற்றும் சோலங்கியர்கள் ஆகியோரின் தனித்தனி குலங்கள் கூர்ஜர பிரதிகார குலங்களிலிருந்து பிரிந்தனர்
  3. 3.0 3.1 3.2 Asoke Kumar Majumdar 1956.
  4. Wink 2002.
  5. Majumdar, Asoke Kumar (1956). Chaulukyas of Gujarat: A Survey of the History and Culture of Gujarat from the Middle of the Tenth to the End of the Thirteenth Century (in ஆங்கிலம்). Bharatiya Vidya Bhavan. pp. 131–135. பார்க்கப்பட்ட நாள் 2022-04-01.
  6. Munshi, Kanaiyalal Maneklal (1957). Glory that was Gurjara Desa (A.D. 550-1300) (in ஆங்கிலம்). Bharatiya Vidya Bhavan. p. 298. பார்க்கப்பட்ட நாள் 2022-04-01.
  7. Majumdar, Ramesh Chandra. Ancient India (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. p. 334.
  8. Sharma, Dasharatha (1975). Early Chauhan Dynasties: A Study of Chauhan Political History, Chauhan Political Institutions and Life in the Chauhan Dominions from 800 to 1316 A. D. (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publishers (Pvt. Limited). pp. 157–158. பார்க்கப்பட்ட நாள் 2022-04-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயகி_தேவி&oldid=3442999" இலிருந்து மீள்விக்கப்பட்டது