நவீன இந்தியாவின் கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவீன இந்தியாவின் கோயில்கள் (Temples of modern India) என்பது இந்தியாவின் முதலாவது பிரதமர் சவகர்லால் நேரு உருவாக்கிய ஒரு சொற்தொடராகும்.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் தொடங்கப்பட வேண்டிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், எஃகு ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், அணைகள், அறிவியல் மற்றும் தொழில்துறைகளை [1][2] விவரிப்பதற்காக பக்ரா நங்கல் அணை கட்டும் பணியைத் தொடங்கியபோது இச்சொற்றொடரை நேரு உபயோகித்தார். [3]

இந்தத் திட்டங்கள் அனைத்தும் கனரகத் தொழில்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் இணைப்புடன் நவீன இந்தியாவின் வளர்ச்சி பற்றிய நேருவின் பார்வையின் ஒரு பகுதியாகும். [4]

பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஐஐடி போன்ற அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நேருவால் நவீன இந்தியாவின் பார்வையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டன. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. PSUs: Modern industrial temples of India DNA, 8 October 2009.
  2. "Temples of Modern India" (in en-US). The Financial Express. https://www.financialexpress.com/archive/templesofmodernindia/90143/. 
  3. "When the big dams came up". The Hindu. 20 March 2015. https://www.thehindu.com/todays-paper/tp-national/when-the-big-dams-came-up/article7013509.ece. பார்த்த நாள்: 5 January 2019. 
  4. Jawaharlal Nehru: Architect of India's modern temples, தி இந்து, July , 2003.
  5. "I Wrote My Will Across the Sky in Stars". இந்தியா டுடே. 6 December 2011. பார்க்கப்பட்ட நாள் 18 September 2015.