த. சீ. நாகாபரணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி.எஸ்.நாகாபரணா
பிறப்புதலகாடு சீனிவாசையா நாகாபரணா
23 சனவரி 1953 (1953-01-23) (அகவை 71)
பெங்களூர், மைசூரு மாநிலம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் மற்றும் நாடக நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1978 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
நாகினி
பிள்ளைகள்பன்னக பரணா (மகன்), சிருத்தாபரணா (மகள்)

தலகாடு சீனிவாசையா நாகாபரணா (Talakadu Srinivasaiah Nagabharana) (பிறப்பு 23 சனவரி 1953) இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், கன்னட திரையுலகில் மற்றும் இணைத் திரைப்படத்தின் முன்னோடியுமாவார். பிரதான மற்றும் இணையான திரைப்படங்களைத் தாண்டிய ஒரு சில திரைப்பட இயக்குனர்களில் இவரும் ஒருவர். தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் இரண்டிலும் இவர் பெரிய வெற்றியைப் பெற்றார். இவர் கன்னடத்தில் 36 திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். இது இவருக்கு 10 தேசிய விருதுகள், 23 மாநில விருதுகளைப் பெற்றுத் தந்தது. மேலும், 8 திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்திய பனோரமாவுக்குள் நுழைந்தது.

கன்னட நாடகத்திற்கு இவர் நிறைய பங்களிப்பினை செய்துள்ளார். புகழ்பெற்ற நாடக ஆளுமை பத்மசிறீ பி. வி. கராந்தின் மாணவராக இருப்பதால், இவர் நடிகர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் என நாடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவர் 36 நாடகங்களை இயக்கியுள்ளார். பல நாடக நிறுவனக்களுக்கு, குறிப்பாக இரங்காயணம், மைசூரு மற்றும் பெங்களூரு, பெனகா தியேட்டர் குழுமத்தின் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.

தூர்தர்ஷன் மற்றும் பிற நிறுவங்களுக்கான தொடர்கள் மற்றும் பிறத் திட்டங்களை இவர் தயாரித்து இயக்கியுள்ளார்.

இவரது திரைப்படங்கள் பிரபலமான சில இந்தி திரைப்படங்களுக்கு ஒரு பெரிய உத்வேகமாக குறிப்பிடப்பட்டன. இவரது திரைப்படம் மைசூர் மல்லிகே 1942: எ லவ் ஸ்டோரிக்கு உத்வேகம் அளித்தது.[1] சிகுரிடா கனசுவின் முக்கிய கதையான சுவதேசிக்கு ஒரு உத்வேகம் அளித்தது.[2] நாகமண்டலா திரைப்படம் பகெலிக்கு உத்வேகம் அளித்தது.[3] கல்லராலி ஹூவகியின் முக்கிய கதையான பஜ்ரங்கி பைஜானின் கதைக்களத்திற்கு ஒரு உத்வேகம் அளித்தது.[4]

இவர், கடந்த 40 ஆண்டுகளில் தனது 34 கன்னடத் திரைப்படங்களில் 20 படங்களுக்கு சர்வதேச, தேசிய, மாநில மற்றும் பிற விருதுகளைப் பெற்றுள்ளார். பெங்களூரு (மாநில திரைப்பட அகாதமி) கர்நாடக சலனாசித்ரா அகாடமியின் தலைவராக இவர் பரிந்துரைக்கப்பட்டார்.[5] தற்போது இவர் கர்நாடக அரசின் கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக உள்ளார்.[6]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், 1953 சனவரி 23 அன்று கர்நாடகாவின் மைசூரு மாவட்டம் தலகாடு என்ற இடத்தில் ஒரு சீனிவாசையா மற்றும் ருத்ரம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மொத்த ஐந்து உடன்பிறப்புகளில் இவர் இரண்டாவதாவார். தந்தைவழி மற்றும் தாய்வழி தரப்பில் உள்ள அவரது தாத்தாக்கள், மடேல் கிரிகவுடா மற்றும் திப்பெகவுடா ஆகியோர் விவசாயிகளாக இருந்தனர். ஆனால் யக்சகான நிபுணர்களாக இருந்தனர். இளம் நாகபாரணர் மீது அவர்களின் செல்வாக்கு மகத்தானது. இவரது தந்தை சீனிவாசையா பெங்களூரு வேளாண் துறையில் துணை இயக்குநராக பணியாற்றினார். தலக்காட்டில் ஆரம்பக் கல்விக்குப் பிறகு, இவரது மேலதிக கல்வி பெங்களூரில் இருந்தது. இவரது கல்லூரி நாட்களில் இவர் சிறந்த நாடக ஆசிரியரான ஆத்யா ரங்காச்சார்யாவின் செல்வாக்கின் கீழ் வந்தார். ஒரு மாணவராக இவர் எவம் இந்திரஜித் மற்றும் ஷோகா சக்ரா ஆகிய இரண்டு நாடகங்களை இயக்கியுள்ளார். இவர் தொழில்முறை நாடகத்துடன் தொடர்பு கொண்டிருந்தார். ஆரம்பத்தில் மேடை மற்றும் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றினார். இறுதியில் ஒரு நடிகர், பாடகர் மற்றும் இயக்குனரானார்.

தனது நாடக நாட்களில் இவர் நாடகத்துடன் தொடர்பு கொண்டிருந்த நாகினி என்பவரைச் சந்தித்தார். இவர்கள் காதலித்து 10 திசம்பர் 1979 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இன்றுவரை திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் நாடகங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். நாகபாரணா இயக்கிய 'கல்லராலி ஹூவாகி'க்கு சிறந்த ஆடைக்கான மாநில விருதையும், சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருதையும் நாகினி வென்றுள்ளார். இந்த தம்பதியருக்கு பன்னக பரணா என்ற ஒரு மகனும், திரைப்பட இயக்குனரான ஸ்ரத்தா என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர் 'பரணா நிகழ்த்து கலை அகாதாமி'யில் ஆசிரியராகவும் இருக்கிறார்.

தொழில்[தொகு]

இவர் இளம் அறிவியல் பட்டம் முடித்த நேரத்தில், தன்னை ஒரு தீவிர நடிகர்-இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டார். இவர் 'சங்யா பால்யா', 'கதலே பெலாகு', 'ஷகாரனா சரோட்டு', 'ஜோகுமாரசாமி', 'ஓடிபஸ்', 'சத்தாவரா நெரலு', 'கிருஷ்ண பாரிஜாதா', 'திங்காரா புத்தன்னா', 'முண்டேனா சாகி முண்டேனா', 'ஹயாவதனா', 'நீகிகொண்டா சாம்ஸா', 'பக்கா', 'பிளட் வெட்டிங்' போன்ற நாடகங்களை இயக்கி நடித்துள்ளார்.[7]

சிறீ ஜகத்குரு ரேணுகாச்சார்யா கல்லூரியில் சட்டம் பயின்றார். ஒரு மாணவராக இருந்தபோதும், தேசிய விருதை வென்ற கிரீஷ் கர்னாட் இயக்கிய காடு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்; சோமனா துடி என்றத் திரைப்படத்தில் பி.வி.கராந்த் உடன் இணை இயக்குநராக இருந்தார். ஒரு மாணவராக இருந்தபோதும் இவர் தனது சொந்த படத்தை இயக்க விரும்பினார். மேலும் தனது முதல் படமான கிரஹானாவை இயக்கியுள்ளார். இது 1979 ஆம் ஆண்டு தேசிய விருதை வென்றது- தேசிய ஒருங்கிணைப்பு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது, சிறந்த திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருது - டி.எஸ். நாகாபரணா & டி.எஸ். ரங்கா, கர்நாடகா மாநில திரைப்பட விருதுகள் 1978-79 - முதல் சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவாளர் (பி & டபிள்யூ) - எஸ்.ராமச்சந்திரா. இந்த படம் ஜெர்மனியின் சர்வதேசத் திரைப்பட விழாவான மன்ஹெய்ம்-ஹைடெல்பெர்க்கிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இவர் ஒரு மேடை தொழிலாளி, நடிகர், பாடகர் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றினார். முன்னணி நாடக பிரமுகர்களான பி.வி.கராந்த், சந்திரசேகர கம்பரா மற்றும் கிரிஷ் கர்னாட் ஆகியோருடன் இவர் தொடர்பு கொண்டிருந்தார்.

நாடகத்துறையில் சாதித்ததற்காக இந்திய அரசிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றார். இவர் "பெனகா" என்ற நாடக அமைப்பின் நிறுவனர் ஆவார்.[8] ஒழுங்கமைத்தல், எழுதுதல், இசையமைத்தல், ஒளிப்பதிவுப் பணி, விளக்குகள் பிடித்தல், கலை, நடிப்பு, தொகுத்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றுக்கான 'சிரத்தாலயா' என்ற அமைப்பையும் இவர் தொடங்கினார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Contributions of Kannada Cinema to Historical Dramas". web.archive.org. 1 July 2018. Archived from the original on 1 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  2. "Top ten Kannada films to have been remade". The Times of India.
  3. "Eight Bollywood movies that are actually remakes of South Indian films". Vogue India.
  4. "ಭಜರಂಗಿ ಮತ್ತು ಕಲ್ಲರಳಿ..." Prajavani. 12 October 2015.
  5. "Develop demand for quality films: Nagabharana - Times of India".
  6. "Nagabharana appointed KDA chief". Deccan Herald. 15 October 2019.
  7. "Nagabharana in College days". Archived from the original on 2020-10-17. பார்க்கப்பட்ட நாள் 2020-10-17.
  8. "D A I J I W O R L D". Archived from the original on 2020-10-19. பார்க்கப்பட்ட நாள் 2020-10-17.
  9. "ventures".[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._சீ._நாகாபரணா&oldid=3556876" இலிருந்து மீள்விக்கப்பட்டது