தில்லையில் மலர்கள் (பெரிய புராணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தில்லை என்பது இக்காலச் சிதம்பரம். தில்லை என்பதே ஒருவகை மலர். இது மிகுயாக இருந்த ஊர் ஆதலால் இந்த ஊருக்கு இந்தப் பெயர் வழங்கலாயிற்று. பெரிய புராணம் இந்த ஊரிலும் அங்கிருந்த நந்தவனத்திலும் பூத்திருந்ததாக இரண்டு பாடல்களில் தெரிவிக்கிறது.[1] [2]

அந்தப் பூக்களை அகர வரிசைப்படுத்திக் காணும்போது இவ்வாறு அமைகிறது.

ஆரம் இலவங்கம் கற்பு கன்னிகாரம் குரவம் கூவிளம் கொன்றை சண்பகம் சரளம் சாதி சூத வகுளம் செருந்தி நந்திகரம் நரந்தம் நாகம் நாளிகேரம் பலாசு பாடலம் புன்னை பூக ஞாழல் மந்தாரம் மரு மாலதி மேகசாலம் மௌவல் வஞ்சி வழை வன்னி வாழை வீரம்

மேற்கோள்[தொகு]

  1.  
    239
    நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம்
    பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி
    மேக சாலமலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப்
    போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம்பணை கடந்து புகுந்தார். 1.5.93

  2. 240
    வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்
    கன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்
    துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த
    பன் மலர்ப் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான். 1.5.94