திருமலிதை சுயம்பு சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமலிதை சுயம்பு சிவன் கோயில் என்பது இந்தியாவின் கேரளாவின் தென்பகுதியில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மல்லப்பள்ளியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். ஆற்றங்கரையில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஒரே சுயம்பு சிவன் கோயில் இதுவாகும். மகாசிவராத்திரி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகின்றார்கள். மணிமாலா ஆற்றின் மணல் கரையில் கொண்டாடப்படுகின்ற மல்லப்பள்ளி காவடியாட்டம் மிகவும் புகழ் பெற்றதாகும்.