திக்குப் பாலகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திக்குப் பாலகர் என்னும் சொல் திசைகாப்பாளரைக் குறிக்கும். இது சோதிடக்கலையின் ஒரு கணிப்பு. திசையை எண்கோணமாக்கி, ஒவ்வொரு திசைக்கும் சில இருப்புகளைக் காட்டுவது இதன் நெறி. கோணத்திசைகளில் குறிப்பிட்ட தெய்வங்கள் இருந்து காப்பதாக எண்ணிக் கணிப்பர்.[1]

திசை காக்கும் தெய்வம் திசை சின்னம் திசையானையின் பெயர் திசையின் பெயர்
இந்திரன் கிழக்கு கொடி ஐராவதம் அருகன் திசை
அங்கி தென்கிழக்கு பூனை ப்ண்டரீகம்
இயமன் தெற்கு சீயம் வாமனம்
நிருதி தென்மேற்கு ஞாளி குமுதம்
வருணன் மேற்கு இடபம் அஞ்ஞானம்
வாயு வடமேற்கு கழுதை புட்ப-தந்தம்
குபேரன் வடக்கு யானை சார்வபூமம் சோமன் திசை
ஈசானன் வடகிழக்கு காகம் சுப்பிரதீபம்

கருவிநூல்[தொகு]

  • சேந்தன் திவாகரம், பல்பெயர் கூட்டத் தொகுபெயர்த் தொகுதி, பதிப்பு, செவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1958

அடிக்குறிப்பு[தொகு]

  1. சேந்தன் திவாகரம், பல்பெயர் கூட்டத் தொகுபெயர்த் தொகுதி, பக்கம் 239
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்குப்_பாலகர்&oldid=3670001" இலிருந்து மீள்விக்கப்பட்டது