தாரகன்
தோற்றம்
தாரகன் இந்து தொன்மவியல் புராணங்களிலும், நூல்களிலும் வருகின்ற அரக்கர் குல அரசன் சூரபத்மனின் சகோதரன் ஆவார். இவர் தாரகாசூரன் என்றும் அறியப்படுகிறார். மிகுந்த தவத்தினால் சிவக்குமாரனால் மட்டுமே மரணம் நேரும் வரத்தினை பெற்றிருந்தார். அதனால் சிவபெருமான் பார்வதி திருமணம் நடைபெற அனைத்து தேவர்களும் விரும்பினார்கள். இறுதியில், முருகக்கடவுளால் (கார்த்திகேயன்) வதம் செய்யப்பட்டார்.
கடுந்தவம்
[தொகு]தாரகனின் கடுந்தவம் பற்றி சிவமாகபுராணம் கூறிகிறது.[1]
- ஒற்றைக் காலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு நூறு ஆண்டுகள் தவம்
- பெருவிரலை மட்டும் ஊன்றி நூறு ஆண்டுகள் தவம்
- நீரை மட்டும் உட்கொண்டு நூறு ஆண்டுகள் தவம்
- காற்றை மட்டும் உட்கொண்டு நூறு ஆண்டுகள் தவம்
- ஜலம்(நீரில்) நூறு ஆண்டுகள் தவம்
- வெயிலில் நூறு ஆண்டுகள் தவம்
- பஞ்சா்கினியின் மத்தியில் நூறு ஆண்டுகள் தவம்
- மரங்களின் கிளைகளைப் பிடித்துக் கொண்டு நூறு ஆண்டுகள் தவம்
- அதோமுகமாக நூறு ஆண்டுகள் தவம்