தாதிபா மெர்வான்ஜி தலால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரூக்வுட் கல்லறைத் தோட்டத்தில் தாதிபா மெர்வான்ஜி தலாலின் கல்லறை

சர் தாதிபா மெர்வான்ஜி தலால் (Sir Dadiba Merwanji Dalal) (1870 திசம்பர் 12 - 1941 மார்ச் 4) [1] இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் பார்சி இராஜந்திரி ஆவார். மேலும் இவர், பிரித்தனில் பணியமர்த்தப்பட்ட இரண்டாவது இந்தியத் தூதருமாவார்.

இவர் பிரித்தன் 1921 புத்தாண்டு மரியாதை பட்டியலில் இந்திய சாம்ராச்சியத்தின் ஒழுங்கின் தோழராக நியமிக்கப்பட்டார். [2] இந்திய அமைப்பின் உறுப்பினரான இவர், முதல் தூதர் சர் வில்லியம் ஸ்டீவன்சன் மேயர், முந்தைய ஆண்டில் இறந்தவுடன் 1923 சனவரியில் ஐக்கிய இராச்சியத்திற்கான இந்தியாவின் முதல் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். [3]

தலால் 1924 புத்தாண்டு மரியாதை பட்டியலில் வீரத்திருத்தகை ஆனார். [4] [5] [6] அந்த ஆண்டின் இறுதியில் ஓய்வு பெற்றார். இவருக்குப் பிறகு சர் அதுல் சந்திர சாட்டர்ஜி இந்தியத் தூதராக நியமிக்கபட்டார். 1941 மார்ச் 4 இல், பிரான்சின் ஜெர்மன் ஆக்கிரமிப்பின் போது, பாரிஸ் அமெரிக்க மருத்துவமனையில் தனது 70 வயதில் இறந்தார். [7] இவர் சர்ரேயில் உள்ள புரூக்வுட் கல்லறையின் பார்சி பிரிவில் அடக்கம் செய்யப்பட்டார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதிபா_மெர்வான்ஜி_தலால்&oldid=2993740" இலிருந்து மீள்விக்கப்பட்டது