தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம்
தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம் என்பது தமிழ்நாட்டில் பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு தமிழ்நாட்டு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டம் ஆகும்.
செய்தியாளர் அடையாள அட்டை[தொகு]
ஒவ்வொரு பத்திரிகை நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் என்கிற அளவிலும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 2 ஒளிப்பதிவாளர்கள், 2 ஒளிப்பதிவு உதவியாளர்கள் ஆகியோர்க்குச் செய்தியாளர் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
பத்திரிகையாளர் அங்கீகார அட்டை[தொகு]
சென்னையில் ஒரு நாளிதழுக்கு 9 செய்தியாளர்கள், 2 புகைப்படக்காரர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் ஆகியோருக்கு பத்திரிகையாளர் அங்கீகார அட்டை வழங்கப்படுகிறது.
பயன்கள்[தொகு]
- அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்
- ரயில் பயணங்களில் 50 சதவிகித கட்டணச் சலுகை,
- ரயில் பயணங்களில் முன்னுரிமைப் பதிவுகள்
- தொலைபேசி இணைப்புப் பெறுவதில் முன்னுரிமை
- வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு[1]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "பத்திரிகையாளர் நலன்". Archived from the original on 2014-03-25. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2014.