சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும் (நூல்)
சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும் | |
---|---|
நூல் பெயர்: | சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும் |
ஆசிரியர்(கள்): | குடவாயில் பாலசுப்ரமணியன் |
வகை: | வரலாறு |
துறை: | கலை |
இடம்: | தஞ்சாவூர் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 459 |
பதிப்பகர்: | தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் |
பதிப்பு: | முதல் பதிப்பு 1987 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். சோழ மண்டலத்தில் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க சிற்பங்களையும், ஓவியங்களையும் பற்றி இந்நூல் ஆராய்கிறது. [1]
அமைப்பு[தொகு]
இந்நூல் எட்டு தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.
தலைப்புகள்[தொகு]
தோற்றுவாய், பல்லவர் இயல், பாண்டியர் இயல், சோழர் இயல், விசயநகர அரசு இயல், நாயக்கர் இயல், மராட்டியர் இயல், பொதுவியல் என்ற எட்டு தலைப்புகளில் விரிவாக பல மன்னர்களின் காலத்திலான கலைக் கூறுகளில் முக்கியமான சிற்பங்களையும், ஓவியங்களையும் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.