செஞ்சி கோதண்டராமர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செஞ்சி கோதண்டராமர் திருக்கோவில் [1]
பெயர்
பெயர்:செஞ்சி கோதண்டராமர் திருக்கோவில் [1]
அமைவிடம்
ஊர்:செஞ்சி
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கோதண்டராமர்
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை:பழங்காலக் கிணறு
தொலைபேசி எண்:9865474252[1]

செஞ்சி கோதண்டராமர் திருக்கோவில் செஞ்சியில் அமைந்துள்ள பழைமையான கோதண்டராமர் திருக்கோயில். இங்கு புனர்நிர்மாணப்பணிகள் நடைபெறுகின்றன. கி.பி.1714ல் தேசிங்கு ராஜா ஆட்சி சமயம் ஆற்காட்டு நவாப் படையெடுத்த போது சிதைக்கப்பட்ட திருக்கோயில்.[2]

பழைமையான கிணறு[தொகு]

இத்திருக்கோயிலில் கருவறையின் பின்புறம் கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட கிணறு இருந்திருப்பது 2012 ஆம் ஆண்டு தெரிய வந்துள்ளது.[3]

தீர்த்தவாரி படித்துறை[தொகு]

சீரமைப்புப் பணிகளின் போது 200 ஆண்டுகளுக்கும் மேல் மண்ணில் மறைந்திருந்த தீர்த்தவாரி படித்துறை வெளிப்பட்டது.[4]

சிலைகள்[தொகு]

இத்திருக்கோயிலின் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ கிருஷ்ணவேணி தாயார், ஸ்ரீ கோதண்டராமர் விக்கிரகங்கள் முன்பு செஞ்சியை ஆண்ட நவாப் படைகளால் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.[3]

சர்ச்சை[தொகு]

கோதண்டராமர் கோயில் அமைந்துள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என்று சில கிறித்துவ அமைப்புகள் கூறியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டு கோயில் வழிபாடு தடுக்கப்பட்டு, பின்னர், இந்து முன்னணி அமைப்பினராலும் மக்களாலும் பிரச்சனை முன்னெடுக்கப்பட்டு கோயில் சாவி வட்டாட்சியரால் இந்து முன்னணியிடம் வழங்கப்பட்டது.[5][2]கோயிலை யாருக்கும் விற்க முடியாது எனும் சட்டப்பிரிவு எடுத்துக்காட்டப்படுகின்றது.[6]

அமைவிடம்[தொகு]

சங்கராபரணி ஆற்றங்கரையில் திண்டிவனத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் செஞ்சி அமைந்துள்ளது.[1]

புனர்நிர்மாணப்பணிகள்[தொகு]

அறக்கட்டளை மூலம் நடைபெற்று வரும் இத்திருக்கோயில் புனர்நிர்மாணப் பணிகளுக்கு குமுதம் ஜோதிடம் வார இதழும் 2012ஆம் ஆண்டு வேண்டுகோள் விடுத்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]