உள்ளடக்கத்துக்குச் செல்

சுபா (எழுத்தாளர்கள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுபா என்பது தமிழ் எழுத்தாளர்கள் டி.சுரேஷ், ஏ.என். பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதும் புனைப் பெயராகும். இவர்கள் இருவரும் தமிழ்த் துப்பறியும் புதினங்கள், திரைக்கதை, சிறுகதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றனர்.

எழுத்துப்பணி

[தொகு]

இவ்விரு நண்பர்களும் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து கதைகளைச் சேர்ந்து எழுதியுள்ளனர். மேலும் 1979-லிருந்து அவற்றை வெளியிட்டு வருகின்றனர். இவர்களிருவரும் குறைந்தபட்சம் 450 குறு நாவல்களையும், 400 சிறு கதைகளையும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்குத் திரைக்கதைகளையும் எழுதியுள்ளனர். கனா கண்டேன், அயன் ஆகிய திரைப்படங்கள் சுபாவின் நாவல்களைத் தழுவி அமைந்துள்ளவை. மேலும் இவற்றின் திரைக்கதை சுபா, கே. வி. ஆனந்த் ஆகியோரால் எழுதப்பட்டது. கோ திரைப்படத்தின் திரைக்கதையும் சுபா, கே. வி. ஆனந்த் ஆகியோரால் எழுதப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த 180 திரைப்படத்தின் திரைக்கதை சுபா, ஜெயேந்திரா ஆகியோரால் எழுதப்பட்டது.[1]

இவர்களின் பெரும்பாலான புதினங்களில் ஈகிள் ஐ டிடக்டிவ் ஏஜென்சியின் நரேந்திரன், வைஜயந்தி ஆகிய கதாபாத்திரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கும். மேலும் ஜான் சுந்தர், செல்வா, முருகேசன் ஆகியவையும் இவர்கள் உருவாக்கிய முக்கியக் கதாபாத்திரங்கள் ஆவர்.

திரைப்படப் பட்டியல்

[தொகு]
ஆண்டு திரைப்படம் எழுத்தாளர்குறிப்புகள்
1998 நாம் இருவர் நமக்கு இருவர் வசனம்
2005 கனா கண்டேன் வசனம்
2005 சாணக்கியா வசனம்
2006 ரெண்டு திரைக்கதை
2008 இன்பா வசனம்
2009 அயன் ஆம்
2011 கோ ஆம்கௌரவத் தோற்றம்
வேலாயுதம் வசனம்
180 ஆம்
2012 மாற்றான் ஆம்
2013 ஆரம்பம் ஆம்
2015 வசனம்
அனேகன் ஆம்
யட்சன் ஆம்
தனி ஒருவன் ஆம்
2017 கவண் ஆம்
வேலைக்காரன் ஆம்
2018 நா நுவே ஆம்தெலுங்குத் திரைப்படம்
2019 ஆக்‌ஷன் ஆம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chakravarthy, Pritham (2008). The Blaft Anthology of Tamil Pulp Fiction. Chennai, India: Blaft Publications. p. 178. ISBN 978-81-906056-0-1. {{cite book}}: Cite has empty unknown parameters: |origmonth=, |month=, |chapterurl=, and |origdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபா_(எழுத்தாளர்கள்)&oldid=4499637" இலிருந்து மீள்விக்கப்பட்டது