சுங்கைப் பட்டாணி மணிக்கூட்டுக் கோபுரம்
சுங்கை பட்டானி மணிக்கூட்டுக் கோபுரம் (Sungai Petani Clock Tower) மலேசியாவில் கெடா மாநிலத்திலுள்ள கோலா மூடா மாவட்டத்தின் சுங்கைப் பட்டாணி நகரில் அமைந்துள்ளது.
வரலாறு[தொகு]
அரியணையில் அமர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், ஐந்தாம் சியார்ச்சு மன்னரின் வெள்ளி விழாவின் நினைவாக இந்த மணிக்கூண்டு கட்டப்பட்டது. 1936 சூன் 4 அன்று இம்மணிக்கூண்டு திறக்கப்பட்டது.[1][2] இலிம் லீன் டெங் என்ற ஒரு பணக்கார பினாங்கு தொழிலதிபர் நன்கொடை வழங்கினார். மணிக்கூண்டை கட்டிடக் கலைஞர் செவ் எங் என்பவர் வடிவமைத்தார்.[3]
கட்டிடக் கலை[தொகு]
செவ்வக வடிவிலான கடிகார கோபுரம் 60 அடி உயரம் கொண்டதாகும். கடிகாரம் தரையில் இருந்து 40 அடி உயரத்தில் உள்ளது. எழில்படுக் கலைப் பாணியில் கட்டப்பட்ட இம்மணிக்கூண்டு ஏற்கனவே உள்ள கடினமான அடித்தளத்தில் தங்கக் குவிமாடத்தால் மூடப்பட்டுள்ளது.[1] வெண்கல நினைவுத் தகட்டில் இந்த கடிகார கோபுரம் சுங்கே பதானிக்கு திரு. லிம் லீன் டெங்கால் அவரது மாட்சிமை வாய்ந்த மன்னர் ஐந்தாம் சியார்ச்சு மன்னர் 1910 முதல் 1936 வரையிலான ஆட்சியின் நினைவாக வழங்கப்பட்டது என எழுதப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "First Memorial to Late King. Clock Tower Unveiled at Sungei Patani". Malaya Tribune: pp. 12. 5 June 1936. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/maltribune19360605-1.2.68.
- ↑ Teh Leam Seng, Alan (4 June 2023). "'Grand Dame' of Sungai Petani". New Straits Times. https://www.nst.com.my/lifestyle/sunday-vibes/2023/06/916393/grand-dame-sungai-petani.
- ↑ "CLOCK TOWER FOR SUNGEI PATANI.". The Straits Times: pp. 13. 22 July 1935. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/straitstimes19350722-1.2.92.