சுகுணா புருசோத்தமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுகுணா புருஷோத்தமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுகுணா புருசோத்தமன் (1941 - 25 பிப்ரவரி 2015) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்[1].

பிறப்பும், இசைப்பயிற்சியும்[தொகு]

சுகுணா புருசோத்தமன் சென்னையில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், திண்ணையம் வெங்கடராம ஐயர், பி. சாம்பமூர்த்தி ஆகியோரிடம் கருநாடக இசையினைக் கற்றார். லலிதாபாய் சாமண்ணாவிடம் வீணை கற்றுக்கொண்டார்.

இசைப் பணி[தொகு]

  • அனைத்திந்திய வானொலி, தூர்தர்சனில் உயர்தரக் கலைஞராக பணியாற்றியவர்.
  • இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் மேடைக் கச்சேரிகள் செய்தவர்.
  • இவர் எழுதிய பாடல்களைக் கொண்ட நூல், கதம்பம் எனப் பெயரிடப்பட்டு வெளியானது.

குறிப்பிடத்தக்க மாணவர்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

மறைவு[தொகு]

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 25 பிப்ரவரி 2015 அன்று சென்னையில் தனது 74ஆவது வயதில் காலமானார்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "SUGUNA PURUSHOTHAMAN Akademi Award: Carnatic Vocal Music". Archived from the original on 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2022-01-09.
  2. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  3. Carnatic musician passes away at 74

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகுணா_புருசோத்தமன்&oldid=3554922" இலிருந்து மீள்விக்கப்பட்டது