சீதவ்வா ஜோதாட்டி
சீதவ்வா ஜோதாட்டி (Sitavva Joddati) என்பவர் கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆவார். இவர் 2018ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார்.[1][2]
இளமை[தொகு]
ஜோதாட்டி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கோடி வட்டத்தில் உள்ள கப்பூர் கிராமத்தில் பிறந்தார். ஆறு மகள்களில் இளையவரான சீதவ்வாவை தேவதாசியாக வழங்குவதாக சமூகத்திற்கு "வாக்குறுதி" கொடுத்தனர் இவர்களது பெற்றோர். இதைச் செய்வதன் மூலம் இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என இவர்களது பெற்றோர்கள் நம்பினர்.[3]
சீதவ்வா, 7 வயதில் ஒரு மதச் சடங்குக்குப் பிறகு, தேவதாசி ஆக்கப்பட்டாள். 17 வயதில், இவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
தொழில்[தொகு]
1991ஆம் ஆண்டு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் லதாமாலாவைச் சந்தித்த சீதவ்வா, தேவதாசிப் பழக்கம் பெண்களின் கண்ணியத்தை எவ்வளவு இழிவுபடுத்துகிறது என்பதை உணர்த்தினார். தேவதாசி முறையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள சீதவ்வா முடிவு செய்தாள். தெற்கு மகாராட்டிரா மற்றும் வடக்கு கர்நாடகாவுக்குச் சென்று மத விழாக்களில் கலந்துகொண்டு மற்ற தேவதாசிகளுடன் சேர்ந்து இந்த நடைமுறைக்கு எதிராகப் பேசத் தொடங்கினர், சீதவ்வா. ஒரு வாரத்திற்குள், தேவதாசி எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்தது.[3]
விரைவில், சீதவ்வா தேவதாசி முறையை ஒழிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மகிளா அபிவிருத்தி சம்ராக்சனா சன்சுதே என்ற அமைப்பில் சேர்ந்தார். அப்போதிலிருந்து, 4,000க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டு மற்ற வேலைகளுடன் மறுவாழ்வு அளித்துள்ளார். இவர் 17 வயதிலிருந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, கருநாடகாவின் பெல்காமில் தேவதாசிகள் மற்றும் தலித்துகளை மேம்படுத்த உழைத்துள்ளார்.[4]
இவர் 2012 முதல் மாஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இந்த அமைப்பில் சுமார் 4000 முன்னாள் தேவதாசிகள் உறுப்பினர்களாக உள்ளனர். சீதவ்வா ஜோதாட்டி, பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள், நிதி மேலாண்மை, பாலின நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற பிரச்சினைகள் பற்றிய உதவிகள் மற்றும் சட்டப் பட்டறைகள் மற்றும் திட்டங்களை நடத்தி வருகிறார். இவர் 300க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை உருவாக்கியுள்ளார். இவை முன்னாள் தேவதாசிகளுக்கு வங்கிகள் மற்றும் சிறு கடன் வழங்குபவர்களுக்கு நிதி உதவி வழங்குகின்றன.[3]
அங்கீகாரம்[தொகு]
மார்ச் 2018-இல், ஜோதாட்டிக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தால் வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "These Are The Unsung Heroes In The 2018 Padma Shri Awards List". NDTV.com. https://www.ndtv.com/india-news/these-are-the-unsung-heroes-in-padma-shri-awards-list-1804833.
- ↑ 2.0 2.1 "#SheInspiresMe: Here Are All The Women Who Inspire Our Politicians, Including PM Modi". News18. https://www.news18.com/news/buzz/sheinspiresme-here-are-all-the-women-who-inspire-our-politicians-including-pm-modi-1683243.html.
- ↑ 3.0 3.1 3.2 "Sitavva leaves ‘service of God’ to save innocents". The New Indian Express. https://www.newindianexpress.com/states/karnataka/2018/feb/04/sitavva-leaves-service-of-god-to-save-innocents-1768121.html.
- ↑ "TBI BLOGS: This Woman Was Dedicated as a Devadasi at Age 7. Today, She Is a CEO" (in en-US). The Better India. 2016-05-04. https://www.thebetterindia.com/54126/devadasi-sitavva-jodatti-mass/.