உள்ளடக்கத்துக்குச் செல்

சிவபிரகாச விசாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவபிரகாச விசாகம் என்பது சிவ பிரகாசர் என்பவர் தமிழில் எழுதிய சைவ சித்தாந்த கவிதைகளின் தொகுப்பு.[1]

கண்ணோட்டம்

[தொகு]

இந்தக் கவிதைகள் [2] [3] பொம்மாபுரம் ஆதீனத்தின் சிவஞ்ஞான பாலய சுவாமிகளுக்கு அர்ப்பணித்து இயற்றப்பட்டுள்ளன.[4]

கவிஞர்

[தொகு]

சிவ பிரகாசர்,[5] ஒரு தமிழ் மெய்நூல் அறிஞரும், முனிவரும், கவிஞருமாவார். இவர் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தார்.

பொம்மைர் பாலயம் மற்றும் சிவபிரகாசர்

[தொகு]

சிவப்பிரகாச சுவாமிகள் தமிழ்நாடு கோயில்கள் முழுவதும் பரவலாகப் பயணம் செய்தார். இவர் பேரூர், சாந்தலிங்க சுவாமிகளை தனது வழியில் சந்தித்தார். மயிலம்முருகன் கோயிலைக் காண இவர்கள் திட்டமிட்டனர். அங்கு இவர்கள் சிவஞான பாலய சுவாமிகளை சந்தித்தனர்.[6] சாந்தலிங்க சுவாமிகள் சிவஞான பாலய சுவாமிகள் பற்றி பாட இவரை வற்புறுத்தினார். ஆனால் சிவப்பிரகாசர் அவரிடம், மனிதர்களைப் பற்றி பாடுவதில்லை என்றும், முருகனை மட்டுமே பாடி புகழ்வேன் என்று கூறினார். அன்று இரவு முருக பகவான் இவரது கனவில் தோன்றி, சிவஞான பாலய சுவாமிகளாக வளர்க்கப்பட்டவர் நான்தான் என்று அவரிடம் கூறினார்.[7] எனவே அவரைப் பற்றி பாடுவதில் தவறில்லை. அன்றிலிருந்து அவர் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.

வசனங்கள் மற்றும் விளக்கம்

[தொகு]

ஆதி சிவஞான பாலய சுவாமிகளின் அருளால் 'சிவானுபூதிசெல்வர்' என்று ஆசீர்வதிக்கப்பட்ட சிறந்த கவிஞர் சிவப்பிரகாசர், சிவபெருமானையும் சிவஞான பாலய சுவாமிகளையும் புகழ்ந்து முப்பத்திரண்டு தொகுதிகளை இயற்றியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த பின்வரும் ஐந்து படைப்புகளில், இவர் தனிப்பட்ட முறையில் அனுபவித்த தனது குருவின் ஞானத்தை நமக்கு விளக்குகிறார்.

சிவஞான பாலய சுவாமிகள், பொம்மபுரம் ஆதீனம் பற்றிய புத்தகங்கள்

[தொகு]
  • சிவஞான பால சுவாமிகள் தாலாட்டு.
  • சிவஞான பால சுவாமிகள் திருப்பள்ளி எழுச்சி.
  • சிவஞான பால சுவாமிகள் நெஞ்சுவிடு தூது.
  • சிவஞான பால சுவாமிகள் கலம்பகம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil Literature". Lisindia.net. Archived from the original on 2014-02-04. Retrieved 2014-08-17.
  2. "Tamil Literature". Lisindia.net. Archived from the original on 2014-02-04. Retrieved 2014-08-17.
  3. "Sri Swami Balyogi Premvarni Ashram". Yogant-foundation.tripod.com. Retrieved 2014-08-17.
  4. "Mailam: A Murukan temple at the crossroads of myth and local culture". Murugan.org. Retrieved 2014-08-17.
  5. "சென்னை நூலகம் - Tamil Literature Books- Nanneri". chennailibrary.com. {{cite web}}: Unknown parameter |access date= ignored (|access-date= suggested) (help)
  6. "Mailam Murugan Temple, Mailam, Tindivanam". ePrarthana.com. 2007-01-24. Retrieved 2014-08-17.
  7. "Periyava Samadhi". Scribd.com. 2013-12-10. Retrieved 2014-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவபிரகாச_விசாகம்&oldid=3589068" இலிருந்து மீள்விக்கப்பட்டது