சிரக்கக்காவு பகவதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரக்கக்காவு பகவதி கோயில் இந்தியாவில் கேரளாவில் உள்ள பழமையான தேவி கோயில்களில் ஒன்றாகும்.[1]

இந்தக்கோயிலின் மூலவர் காளி தேவி ஆவார். அவர் திருகுணாத்மிகா எனப்படுகின்ற மூன்று வடிவங்களில் வழிபடப்படுகிறார். கொடுவல்லி ஆற்றில் சுயம்புவாக அம்மன் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கோலத்திரி மன்னன் சிரக்கல் ராஜாவால் இக்கோயில் கட்டப்பட்டது. ஆதலால் இக்கோயில், சிரக்கக்காவு என்று புகழ் பெற்றது.

துணைத்தெய்வங்கள்[தொகு]

இக்கோயிலில் குண்டூர் கோட்ட வானவர், இளங்கருமகன், பூதாடி ஆகியோர் ஒரே சன்னதியில் துணைத்தெய்வங்களாக உள்ளனர். நாலம்பலத்திற்கு வெளியில் கோயிலின் தென்மேற்கு மூலையில் நாகராஜா, நாககன்னிகா, சித்திரக்கூடம் ஆகியவற்றைக் கொண்ட சர்ப்பக்காவு எனப்படுகின்ற பாம்பிற்கான சன்னதி உள்ளது.

திருவிழா[தொகு]

இக்கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மேடம் மாதத்தின் 9-12 நாட்களில் (ஏப்ரல் 22 முதல் 25 வரை) கொண்டாடப்படுகிறது. அடுத்து தெய்யம் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

முக்கியமான நாட்கள்[தொகு]

சிங்கம்- உத்ராடம் - நீரா ஆகோஷம், நவராத்தி, சரசுவதி பூசை, கிரந்த பூசை, வாகன பூசை, வித்யாரம்பம், தனு 9- மண்டல பூசை - சுத்துவிளக்கு மகரம்- பிரதிஷ்டை தினம் மேடம் 9-12 விழா- திரா விழா உள்ளிட்டiவ முக்கியமான நாட்களாகும்.

திருப்பணி[தொகு]

கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகின்றது. அண்மையில் கருவறை புதுப்பிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் அஸ்தபந்த கலசத்துடன் அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]