சித்திரம் பேசுதடி (தொலைக்காட்சித் தொடர்)
தோற்றம்
| சித்திரம் பேசுதடி | |
|---|---|
| வகை | நாடகம் |
| இயக்கம் | திருச்செல்வம் |
| நடிப்பு | ரதி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| அத்தியாயங்கள் | 217 |
| தயாரிப்பு | |
| படப்பிடிப்பு தளங்கள் | இந்தியா |
| ஓட்டம் | ஏறத்தாழ 15-20 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு) |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | ஜெயா தொலைக்காட்சி |
| ஒளிபரப்பான காலம் | 9 டிசம்பர் 2013 – 17 அக்டோபர் 2014 |
சித்திரம் பேசுதடி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாதொடர். தாயில்லாத, தந்தையின் வளர்ப்பில் வளரும் 5 சகோதரிகளின் கதை. இந்த தொடரை கோலங்கள், மாதவி, பொக்கிஷம் தொடர்கள் மூலம் சின்னத்திரை நேயர்களுக்கு அறிமுகமான இயக்குநர் திருச்செல்வம் இயக்குகிறார். திருச்செல்வம் தியேட்டர்ஸ் நிறுவனம் ‘‘சித்திரம் பேசுதடி தொடரை தயாரித்து வழங்குகிறது. இந்த தொடருக்கு நவநீத் சுந்தர் இசையமைத்துள்ளார். கவிஞர் தாமரை பாடல்கள் எழுதியுள்ளார்.
‘சொல்ல மறந்த கதை' திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரதி கதையின் நாயகி தேன்மொழி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் ரம்யா, பூஜா, ஸ்ரீதேவி ஆகியோர் சகோதரிகளாக நடிக்கின்றனர்.
நடிகர்கள்
[தொகு]- ரதி -தேன்மொழி
- ரம்யா
- பூஜா
- சத்யப்பிரியா
- விஜயகிருஷ்ணராஜ்
- பாரதி
- மோகன் வைத்யா
- ஷ்ரவன்
- பிரகாஷ்ராஜன்
- ஸ்ரீதேவி
- பவ்யகலா
- ஹர்ஷிதா
- சங்கரன்கோவில் கணேசன்
- ருத்ராஸ்ரீ
- மாஸ்டர் ரோகன் மற்றும் பலர்.