சாமி மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாமி மூர்த்தி மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்றவர். எண்பதுகளில் "இலக்கியச் சிந்தனை" என்னும் அமைப்பினைத் தோற்றுவித்து நடத்தியுள்ளார். இப்போது "அகம்" என்னும் இலக்கிய அமைப்பில் ஈடுபாடு கொண்டுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "நேர் கோடுகள்" (சிறுகதைகள்)
  • "சாமி மூர்த்தி சிறுகதைகள்" (2001)

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • 'தங்கப் பதக்கம்' - தமிழ் நேசன் பத்திரிகை
  • 'சங்கிலிமுத்து அங்கம்மா பரிசு' - பாரதிதாசன் குழுவினர் (2002).

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமி_மூர்த்தி&oldid=3243621" இலிருந்து மீள்விக்கப்பட்டது