சாந்தா கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாந்தா கிருஷ்ணன் (பி: 1939) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியையாவார். பினாங்கு இந்து சங்கத்தின் தலைவியாக பல ஆண்டுகள் இருந்துள்ளார். இந்து சமயத் தொண்டர். தற்போது சமய வகுப்புகளையும், தேவார வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1983 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், பக்திப் பாடல்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

இசைநாடாக்கள்[தொகு]

இவர் ஒரு சிறந்த பாடகராவார். இவரால் மூன்று இசைநாடாக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • PJK அரசாங்க விருது

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தா_கிருஷ்ணன்&oldid=3243527" இலிருந்து மீள்விக்கப்பட்டது