சந்திரநேரு சந்திரகாந்தன்
Appearance
சந்திரநேரு சந்திரகாந்தன் Chandra Nehru Chandrakanthan | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் தேசியப் பட்டியல் | |
பதவியில் 2006–2010 | |
முன்னையவர் | யோசப் பரராஜசிங்கம், ததேகூ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 12, 1970 |
அரசியல் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
பணி | கடல்சார் பணியாளர் |
சமயம் | கிறித்தவர் |
சந்திரநேரு சந்திரகாந்தன் (Chandra Nehru Chandrakanthan) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
அரசியலில்
[தொகு]சந்திரகாந்தன் படுகொலை செய்யப்பட்ட ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேருவின் மகன் ஆவார்.[1]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோசப் பரராஜசிங்கம் 2005 டிசம்பர் 24 இல் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது இடத்திற்கு சந்திரகாந்தன் தேசியப் பட்டியல் மூலம் தெரிவானார். இவர் செப்டம்பர் 2006 முதல் பெப்ரவரி 2010 வரை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார்.
2010 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் அம்பாறை மாவட்டத்தில் ததேகூ சார்பில் போட்டியிட்டுத் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.