க. பூபாலன்
க. பூபாலன் (பி: 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் 'கே.பி.ஷாமினி' எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தினமுரசு" "தினமணி" நாளிதழ்களுக்கு நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்[தொகு]
- "நம்பிக்கை ஒளி" (சிறுகதைத் தொகுப்பு)
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் க. பூபாலன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்