க. பூபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. பூபாலன் (பி: 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் 'கே.பி.ஷாமினி' எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தினமுரசு" "தினமணி" நாளிதழ்களுக்கு நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "நம்பிக்கை ஒளி" (சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பூபாலன்&oldid=3237547" இலிருந்து மீள்விக்கப்பட்டது