கோ. தனசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோ. தனசேகரன் (பிறப்பு: சூன் 27 1958) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கோவதன்' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் மாற்று மருத்துவம்; இயற்கை மருத்துவருமாவார். மற்றும் பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்திலும் செபராங் பிறை எழுத்தாளர் வாசகர் இயக்கத்திலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1978 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளும், மற்றும் சிறுகதைகள், கட்டுரைகளும் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "சக்திவேல் பாமாலை" (1993)
  • "பரமக்குடி அருள்மிகு முத்தால பரமேஸ்வரி அம்மன் இருபா இருபது அந்தாதி" (1993)
  • "புனல்" (கவிதைத் தொகுப்பு அச்சில்)

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • வள்ளல் ரெனா பொற்பதக்கம் - வட மலாயா தமிழ் எழுத்தாளர் சங்க வெள்ளி விழாவில்
  • முதல் பரிசு - தமிழ் எழுத்தாளர் தினக் கவிதைப் போட்டி (1998)
  • முதல் பரிசு - கண்ணதாசன் விழாக் கவிதைப் போட்டி

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._தனசேகரன்&oldid=3242037" இலிருந்து மீள்விக்கப்பட்டது