கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் கோயில்
வானமுட்டிப் பெருமாள் கோயில் | |
---|---|
![]() வானமுட்டிப்பெருமாள் கோயில் ராஜகோபுரம் | |
பெயர் | |
பெயர்: | வானமுட்டிப் பெருமாள் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கோழிக்குத்தி |
மாவட்டம்: | மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வானமுட்டிப் பெருமாள் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள மூவலூரிலிருந்து 2 கி.மீ. புறவழிச்சாலையில் 5 கி.மீ. தொலைவில் கோழிக்குத்தி அமைந்துள்ளது. சோழன்பேட்டை கிராமத்தில் அமைந்த கோடிஹித்தி பாப விமோசனபுரமே கோழிக்குத்தி என்று தற்போது அழைக்கப்படுகிறது.[1]
இறைவன், இறைவி
[தொகு]14 அடி உயரத்தில் அத்தி மரத்தில் வடிக்கப்பட்டு மூலிகை நிறம் தீட்டப்பட்டு கிழக்கு நோக்கிய நிலையில் இறைவன் உள்ளார். பக்தப்ரியன் என்ற பெயரில் இப்பெருமாள் தயாலட்சுமி, பூமிதேவியோடு உள்ளார்.[1] கோயிலின் தீர்த்தம் பிப்பல மகரிஷி தீர்த்தம் ஆகும்.[2]
பிற சன்னதிகள்
[தொகு]இக்கோயிலில் வரதராஜப்பெருமாள், யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், நர்த்தன கிருஷ்ணர், கருடாழ்வார், சப்தசொரூப ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், ராமானுஜர், பிப்பல மகரிஷி ஆகியோருக்கான சன்னதிகள் காணப்படுகின்றன.[1] இங்குள்ள ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்றழைக்கின்றனர். இச்சிலையில் தட்டினால் ஏழு இடங்களில் ஓசை வருகிறது.[2]