கொடுதி வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடுதி வழிபாடு என்பது தீமைதரும் தெய்வங்களுக்குப் படையலிடுவதைக் குறிப்பதாகும்.[1] இவ்வாறு படையல் இடுவதால் தீமை தரும் தெய்வங்கள் துன்பம் தராமல் சாந்தியடையும் என்று நம்புகின்றனர்.

பிரிவுகள்[தொகு]

விவசாயக் கொடுதி, வேட்டைக் கொடுதி என இருவகைப் பிரிவுகளில் கொடுதி சடங்குகள் உள்ளன. [1]

விவசாயக் கொடுதி என்பது கொடுதிச் சடங்குகளில் உற்பத்தியை மையமாகக் கொண்டு நடத்தப்படுபவை. வேட்டைக் கொடுதி என்பது வேட்டையில் பொருள் கிடைப்பதின் பொருட்டு நடத்தப்படுபவை.

விவசாயக் கொடுதி[தொகு]

  • மீனக்கொடுதி - விவசாயத்துக்குத் திட்டமிடும் வழிபாடு [2]
  • கச்சிக் கொடுதி - அறுவடைக்கு முன்னர் செய்யப் படும் வழிபாடு [2]
  • பூக்கொடுதி - அறுவடை செய்த தானியத்தில் விதைகளைச் சேகரிப்பதற்கான வழிபாடு [2]

பிற கொடுதி[தொகு]

  • மகரக் கொடுதி - வன தெய்வங்களுக்காக நடத்தப்படும் வழிபாடு [2]
  • அம்மங்கொடுதி - அம்மை போன்ற நோய்கள் தாக்கும் காலங்களில், பெண் தெய்வத்துக் காக நடத்தப்படுவது [2]

கார்த்திகை கொடுதி[தொகு]

மேற்கு தொடர்ச்சி மலையயில் வாழும் பழங்குடிகளான காணி மக்கள் கார்த்திகை மாதம் முழுவதும் கொடுதி வழிபாடு செய்கின்றனர். [3] எனவே கார்த்திகை கொடுதி எனவும் அழைக்கப்படுகிறது. [4]

வனதேவதைகளைத் திருப்திப்படுத்தவும், நோய் அண்டாமலிருக்கவும் இவ்வழிபாட்டினை நடத்துகின்றனர். இவ்வழிபாட்டினை நடத்தும்போது கார்த்திகைச் சாற்றுப்பாடல் பாடுவது வழக்கம். இவ்வழிபாட்டு விழாவினை அவர்கள் நடத்தும் அனைத்துவிழாக்களை விடவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஒவ்வொரு குடியிருப்பிலும் கொண்டாடுகின்றனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் - மகாகவி பாரதியார் அச்சகம் - பக்கம்- 277
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "மண்... மக்கள்... தெய்வங்கள்! - 7". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |website= (help)
  3. "காணி மக்களின் கார்த்திகை பொங்கல்". Dinamalar.
  4. "'காணி பழங்குடிகள்' - மேற்கு தொடர்ச்சி மலை பூர்வகுடிகளின் அற்புத வாழ்க்கை!". Samayam Tamil.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுதி_வழிபாடு&oldid=3708378" இலிருந்து மீள்விக்கப்பட்டது