கூமி நரிமன் வாடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூமி நரிமன் வாடியா
பிறப்பு6 ஆகத்து 1933 (1933-08-06) (அகவை 90)
விருதுகள்பத்மசிறீ
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கூமி நரிமன் வாடியா பத்மசிறீ விருது பெறுகிறார்.

கூமி நரிமன் வாடியா (Coomi Nariman Wadia) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இசைக்குழு இயக்குநர் ஆவார்.[1][2] 1933 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஆறாம் தேதியன்று இவர் பிறந்தார்.

வாழ்க்கை[தொகு]

மும்பையிலுள்ள சர் இயம்செட்ச்சி சிச்சிபாய் கலைப் பள்ளியில் பயின்ற பின்னர் இலண்டன் நகரத்திலுள்ள டிரினிட்டி இசைப்பள்லியில் இரண்டு பட்டயங்களை கூமி நரிமன் வாடியா பெற்றார்.[3]

விக்டர் பரஞ்சோதியால் உருவாக்கப்பட்ட பரஞ்சோதி சேர்ந்திசை அகாடமியில் ஓர் உச்சக்குரலிசைப் பாடகராகச் சேர்ந்தார். பரஞ்சோதி இல்லாத நாட்களில் அவர் வேடத்தையேற்று இசைக்குழுவின் இயக்குநராக செயல்படுவார். 1964 ஆம் ஆண்டில் பரஞ்சோதி இறந்தவுடன் அந்த இசைக்குழுவுக்கு இவர் இயக்குநரானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A chorus of celebration" (in en-IN). The Hindu. 2017-11-27. https://www.thehindu.com/entertainment/music/a-chorus-of-celebration/article21007211.ece. 
  2. "Coomi Wadia can go from a Goan folk song to a tango to song from the Vedas with equal flair". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-01-28. பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
  3. "Padma Shri - Coomi Nariman Wadia" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூமி_நரிமன்_வாடியா&oldid=3922457" இலிருந்து மீள்விக்கப்பட்டது