குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரம்

ஆள்கூறுகள்: 7°29′12.8″N 80°21′54.3″E / 7.486889°N 80.365083°E / 7.486889; 80.365083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரம்
குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரம்
ஆள்கூறுகள்7°29′12.8″N 80°21′54.3″E / 7.486889°N 80.365083°E / 7.486889; 80.365083
இடம்குருணாகல், இலங்கை
கட்டுமானப் பொருள்கருங்கல், சீமைக்காரை, மரம்
முடிவுற்ற நாள்1922
அர்ப்பணிப்புஇது முதல் உலகப் போரில் பங்கேற்று இறந்த வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களின் நினைவாக 1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[1]

குருணாகல் கடிகார கோபுரம் (Kurunegala Clock Tower) என்பது இலங்கையின் குருணாகல் நகரத்தில் அமைந்துள்ளது. இது முதல் உலகப் போரில் பங்கேற்று இறந்த வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களின் நினைவாக 1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. [2] குருணாகல் நீதிமன்றம், மத்திய சந்தை, மத்திய பேருந்து நிலையம் ஆகியவை இக்கடிகார கோபுரத்திற்கு அருகில் உள்ளன.

வரலாறு[தொகு]

முதல் உலகப் போரில் (1914-1918) வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் மூன்று இலங்கையர்களும் அடங்குவர். அவர்களை கௌரவிப்பதற்காக இக்கோபுரம் அமைக்கப்பட்டது. கோபுரத்தின் மீது ஒரு நினைவுத் தகடு பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது:

“இந்த மணிக்கூட்டுக் கோபுரம் வடமேற்கு மாகாணத்திலிருந்து கடமை என்ற அழைப்பின் பேரில் சென்று 1914-1918 உலகப் போரில் பேரரசிற்காக தங்கள் உயிரைக் கொடுத்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.”

1945-க்குப் பிறகு, இரண்டாம் உலகப் போரில் (1939-1945) தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரம் மிக்க அதிகாரிகளுக்கும் இந்தக் கோபுரம் அர்ப்பணிக்கப்பட்டது. [3]

அம்சங்கள்[தொகு]

கருங்கல், சீமைக்காரை, மரம் ஆகியவற்றைக் கொண்டு நாற்கர வடிவத்தில் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முழு கோபுரமும், குறிப்பாக மேலே, ஒரு நாற்புற கோட்டைக்கு ஒத்ததாக தோன்றுகிறது. உள்ளே கான்கிரீட்டாலும், மரத்தாலும் செய்யப்பட்ட படிகள் உள்ளன. [4]

உசாத்துணை[தொகு]

  1. Dhananjani Silva (28 September 2014). "Kurunegala, a regal city". The Sunday Times. Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
  2. "Unveiling the beauty of Athugalpura". Ceylon Today. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Sri Lanka war monuments". Silumina (in Sinhala). Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "මහායානයයි - හීනයානයයි එකට පැටලුණු වංග දේශය". Mawbima (in Sinhala). Archived from the original on 27 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)