கி. சுந்தர்ராஜ்
கி. சுந்தர்ராஜ் (பிறப்பு: நவம்பர் 8 1946) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு சுற்றுலா நிர்வாகியாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1989 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக தன்முனைப்பு தத்துவ, நகைச்சுவைக் கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
நூல்கள்[தொகு]
கட்டுரை நூல்கள்[தொகு]
- "நாங்கள் பேசினால்"
- "விலங்குகள் பேசினால்"
- "ஐந்து மூலங்கள்" (2003)