கி. அரங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.அரங்கன்

கி. அரங்கன் (K.Rangan, 3 செப்டம்பர் 1942) தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் ஆவார்.

பிறப்பு[தொகு]

தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் சின்னச்சேலம் என்னும் ஊரில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர் கிருஷ்ணசாமி ராஜம்மாள் ஆவர்.

கல்வி[தொகு]

  • பி.ஓ.எல் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், தமிழ்நாடு, 1963)
  • முதுகலை (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், தமிழ்நாடு, 1965)
  • முனைவர் (தில்லி பல்கலைக்கழகம், புதுதில்லி, 1973)

பணி[தொகு]

மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (En: Central Institutue of Indian Languages) 1970 முதல் 1982 வரையிலும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் 1982 முதல் 2003 வரையிலும் பணியாற்றியுள்ளார்.

நூல்கள்[தொகு]

மொழியியல், இலக்கியம், சமூகவியல், இலக்கணம் உள்ளிட்ட துறைகளில் 60க்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். கீழ்க்கண்ட நூல்கள் உள்பட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

  • தொடரியல் மாற்றிலக்கண அணுகுமுறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985 [1]
  • நோம் சோம்ஸ்கி பன்முக அறிமுகம், மொழியியல் துறை, கோயம்புத்தூர் [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._அரங்கன்&oldid=2707506" இலிருந்து மீள்விக்கப்பட்டது