கிருட்டிணராயன்
Jump to navigation
Jump to search
கிருட்டிணராயன் என்பவர் கொங்கு தேச ராஜாக்கள் என்னும் புராண நூலில் கூறப்படும் ரெட்டி வம்சத்தின் மூன்றாவது அரசராவார்.[1]
ஸ்கந்தபுரம்[தொகு]
கதையின் படி இவனும் தன் தந்தையைப் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினான் என்பதை தமிழில் எழுதப்பட்ட கையேட்டுப் பிரதியில் இருந்து அறிய முடிகிறது. கொங்கு தேசத்தை ஆரம்பத்தில் ஆண்டதாகக் கூறியிருக்கும் ரெட்டி வம்ச அரசர்கள் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக அறியப்படுகிறது. இவரும் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் என அறியமுடிகிறது.[2]
சான்றாவணம்[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- Kongudesarajakkal , Government manuscript Library, Chennai