கிரித்குமார் மன்சுக்லால் ஆச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரித்குமார் மன்சுக்லால் ஆச்சார்யா
Kiritkumar Mansukhlal Acharya
ஆக்சார்யா பத்மசிறீ விருது பெறும் நிகழ்வு
பிறப்புஇந்தியா, குசராத்து, சவுராசுட்டிரா
பணிதோல் மருத்துவர்
மருத்துவப் பணிவாழ்வு

கிரித்குமார் மன்சுக்லால் ஆச்சார்யா (Kiritkumar Mansukhlal Acharya) என்பவர் ஓர் இந்திய தோல் மருத்துவராவார். தொழுநோயை ஒழிப்பதற்கான சேவைகளுக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.[1][2][3] மருத்துவம் மற்றும் சமூக சேவைத் துறைகளில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக, 2014 ஆம் ஆண்டு இந்திய அரசு நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கி சிறப்பித்தது.[4]

கிரித்குமார் மன்சுக்லால் ஆச்சார்யா பொதுவாக இவரது பிரபலமான பெயரான கே.எம். ஆச்சார்யா என்ற பெயரால் அதிகமாக அறியப்படுகிறார்.[2] இவர் மேற்கு இந்திய மாநிலமான குசராத்தில் உள்ள சவுராசுடிராவைச் சேர்ந்தவராவார்.[1] இவரது மருத்துவ வாழ்க்கை முக்கியமாக இயாம்நகரில் உள்ள எம். பி. சா மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் தோல், பாலியல் பரவும் நோய்கள் மற்றும் தொழுநோய் துறைகளின் தலைவராகவும் கழிந்தது.[3] பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரித்குமார் மகாத்மா காந்தி தொழுநோய் சங்கத்தை நடத்தி வருகிறார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "27 recipients from the field of medicine in Padma awards 2014". Medicos India. 28 January 2014. Archived from the original on 2 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
  2. 2.0 2.1 2.2 "7 Gujaratis in Padma awards list". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 January 2014. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/7-Gujaratis-in-Padma-awards-list/articleshow/29383553.cms. பார்த்த நாள்: 5 November 2019. 
  3. 3.0 3.1 3.2 "Dr Neelam Kler to be conferred with Padma Bhushan award". India Medical Times. 26 January 2014. Archived from the original on 5 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 November 2019.
  4. "List of Padma Awardees for the year 2014". CNN-News18. 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 5 November 2019.

புற இணைப்புகள்[தொகு]

  • "Sehat". Sehat. 30 January 2014. பார்க்கப்பட்ட நாள் 5 November 2019.