காரிமங்கலம் அருணேசுவரர் கோயில்
அருணேசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | அருணேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | காரிமங்கலம் |
மாவட்டம்: | தர்மபுரி மாவட்டம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அருணேசுவரர் |
தாயார்: | உண்ணாமுலை |
தல விருட்சம்: | அரச மரம், வேப்பமரம் |
சிறப்பு திருவிழாக்கள்: |
|
வரலாறு | |
தொன்மை: | கி.பி.11 நூற்றாண்டு |
காரிமங்கலம் அருணேசுவரர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது காரிமங்கலத்தில் ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ளது.[1] கோயிலுக்குச் செல்ல குன்றுக்கு படிக்கட்டுகளும், சிமெண்டு சாலையும் உள்ளன.
கோயிலின் வரலாறு[தொகு]
இக்கோயிலின் இறைவன் ஆரணீசுவரமுடையார் என கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டுகிறார். இக்கோயிலின் பழமையான கல்வெட்டு என்றால் அது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தெளிவற்ற கன்னடக் கல்வெட்டாகும். இந்தக் கோயிலின் கோபுரம் 1898 இல் இராமசெட்டி என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.
கோயிலமைப்பு[தொகு]
இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், முன்மண்டபம், திருமண மண்டபம், வேள்வி மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அம்மன் கோயில் கோயிலின் வடமேற்கே அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தெற்கு நோக்கி இராச கோபுரம் ஐந்து நிலைகளுடன் உள்ளது. [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "KARIMANGALAM-SIVAN/காரிமங்கலம்-சிவன்/அருணேசுவரர்". நவபழனிக்கோ அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். பக். 169.