கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரணவாய் மூத்த விநாயகர் கோயில் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள கரணவாய் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்திபெற்ற ஆலயம் ஆகும்.

வரலாறு[தொகு]

இற்றைக்கு சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்னர் திரு.அருணாச்சலம் அவர்கள் "ஓலைக் கொட்டிலும் சாந்து கட்டுமாக இருந்த ஆலயத்தில் திருமெழுகிட்டு பூசையாற்றி வந்தார். எவர் மூப்பெய்திய பின் இவரது குமாரர்கள் கணபதிப்பிள்ளை , சுந்தரம் ஆகியோ ர் தமது பள்ளி பராயத்தில் காலையில் பூசை முடித்து புலோலி ஆண்கள் பாடசாலைக்கு நடந்து சென்று படித்த கதை சொல்வார்கள்..இவர்கள் காலத்தில் தான் எமது ஆலயத்தில் திருப்பணிகளை மேற்கொள்ள விநாயகப் பெருமான் திருவுளங்கொண்டார்.

அதன்படி திருப்பணிக்கு அடிக்கல் நாட்டும் வைபவத்திற்கு நம்மூர் பெரியவர் உயர்திரு.கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் அடியார்கள் கூடி நின்றனர்.ஆகம கிரியைகள் முடிந்து அடிக்கல் நாடும் வேளை வந்ததும் பொன்னம்பலம் அவர்கள் கணபதிப்பிள்ளை ஐயா அவர்களை "மணியம் வாரும் நீர்தான் நாளுக்கு அடிக்கல்லை வையும் நீர் தான் இன்று முதல் மணியம் ஆக இருந்து திருப்பணிகளை கவனிக்க வேண்டும்" என்று கூறினார்.அன்று தொடக்கம் அவருக்கு "மணிய ஐயா " எனும் நாமம் வரலாயிற்று. அன்று தொடக்கம் அப் பெரியவர் அருள் வழி நின்று திருதொண்டடாற் றலானார் .இதனை மறுதலையாக கூறுங்கால் திருவருள் மணிய ஐயாவின் வடிவில் செயற்படத் தொடங்கிற்று எனலாம்.

மணிய ஐயா அவர்களின் தொண்டின் மகத்துவத்தினால் சுமார் 15 ஆண்டுகளில் நான்கு மண்டபங்கள் வரை வெள்ளைக்கல் திருப்பணி வேலைகள் நிறைவுற்றது. குடமுழுக்கு விழா ஸ்ரீலஸ்ரீ வேதாரணிய க்குருக்கள் , சட்டநாத குருக்கள் ஆகியோரால் நிகழ்த்தப்பட்ட்து. அதன் பின் ஸ்ரீலஸ்ரீ கைலாசநாதக்குருக்கள் அவர்களின் சிறிய தந்தையர் நமசிவாயக்குருக்கள் அவர்கள் நித்திய பூசைக்கு வரத்தொடங்கினர். இதன்காரம் குமாராலையே நித்திய பூசைகள் நிகழ்த்தப் பெறுவது யாவரும் அறிந்ததே.

இந்நாட்களிலேயே மூலமூர்த்தி, மூஷிகம், பலீபீடம், வைரவர், மட்டும் இருந்த கோவிலில் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த விநாயகமூர்த்தி ஸ்தபதி அவர்களால் செதுக்கப்பட்ட எழுந்தருளி விக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இஸ்தம்பம்,யாகசாலை,வசந்தமண்டபம், என்பவை இஸ்தாபிக்கப்பட்டு மகோற்சவம் நிகழ்த்தப்பெறலாயிற்று.அக்காலத்தில் வெகு விமர்சையாக மேளம், சின்ன மேளம் வான வேட்டிக்கைகளுடன் திருவிழாக்கள் நடைபெற்றமைக்கு எம்மூரில் மட்டுமல்ல யாழ்ப்பாணக்குடாநாடு முழுவதிலுமுள்ள பல முதியோர்கள் இன்றும் சான்று பகர உள்ளனர்.

1917ம் ஆண்டில் கோவிலின் அருகில் வாழ்ந்த புக்காத்தை என்பவரின் நேர்த்திக்கடனாக நாகதாமிரனும் 1918ம் ஆண்டளவில் மணிய ஐயாவின் மகன் கந்தையா தந்தையரின் நேர்த்திக்கடனாக சனிஸ்வரனும் இஸ்தாபிக்கப்பட்டன. சிலகாலஞ் செல்லக் கோவிலுக்கு வடமேற்றக்கவுள்ள பண்டிதரத்தறை என்னும் காணியிற் கிணறு வெட்டிய போது ஒரு பிள்ளையார் விக்கிரகம் வெளிப்படலாயிற்று அயலவர்கள் ஓடிவந்து மணிய ஐயாவிடம் கூற அவர் போய்ப் பார்த்துவிட்டு அதை கோவிலுக்கு கொண்டுவந்து உரிய கிரியைகள் செய்து மகாமாண்டத்துள் வைத்து வழியாடலாயினர். சில காலம் திருப்பணி வேலைகள் தடைப்பட்டு இருந்ததைக்கண்டு மன வேதனை கொண்ட மணிய ஐயா மூல மூர்த்தியிலும் பார்க்க சற்றுப் பெரிதான இவ் விக்கிரகம் உள்ளே இருப்பதால் தான்போலும் மூல மூர்த்தியின் அனுக்கிரக்கம் குறைந்து விட்ட்து என உணர்ந்து அந்த பிள்ளையாரை தீர்த்த கிணற்றுக்கு மேற்கே ஒரு மாடமைத்து பிரதிஸ்ட்டை செய்தனர் . அக் காலத்தில் வீதியின் நடுவே கிணறு அமைந்திருந்ததால் சுவாமி வீதி வலம் வரும் போது பலகைகளால் கிணற்றை மூடிவிட்டு அதற்கு மேலாக சுவாமி கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. இந் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு புதிய கிணறு அமைக்கப்பட்டு பழையது நிரவப்படது. இதன் பின் தூதவளையில் வாழ்ந்த பா.க.கிருஸ்ணபிள்ளை , வயிராவத்தையில் வாழ்ந்த தாமார் ஆகியோரின் கூட்டு முயற்சியில் வேல் இஸ்தாபிக்காட்டது.

மணிய ஐயா அவர்கள் பொன்னாலையில் இருந்த அவரது சகலனார் சின்னக்குட்டி ஐயாவிடம் இரவலாக ஒரு சிறிய பிள்ளையார் விக்கிரகத்தை எடுத்து வந்து சதுர்த்தி உற்சவம் நடத்தி வந்தார். சில காலம் செல்ல சின்னகுட்டி ஐயா இரவலை மீளபெற்றுக்கொண்டார்.அதனால் மன வேதனையடைந்த மணிய ஐயா உடனே யாழ்ப்பாணம் சென்று 100 ரூபாய்க்கு ஒரு பிள்ளையார் விக்கிரகத்தை வாங்கிவந்து இஸ்தாபித்து சதுர்ததி உற்சவம் இடையூறுயின்றி நிகழ வழி செய்தார்.

1945ல் ஜீர்ணோத்தாரண கும்பாவிஷேகம் நிகழ்வுற்றது. அதனை தொடர்ந்து திருவிழாக்களில் சப்பரத்தில் மூன்று சாற்றுப்படிகள் வரவேண்டும் என்பதற்காக மூர்த்திகளின் முகத்தை மாத்திரம் வைத்து சாற்றுப்படி செய்து வந்தனர் (இது அக் காலத்தில் சில ஆலயங்களில் நடைமுறையில் இருந்தது.) உற்சவ உபயகாரரின் மனக்குறையை நீக்க எண்ணிய மணிய ஐயா யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை சிவன் கோவிலில் ஈசான மூலையில் இருந்த விஸ்வஸ்ரீ லக்ஷ்மண ஆச்சாரியார் பரீட்ச்சார்த்தமாக செதுக்கி வைத்திருந்த வைரவர் விக்கிரகத்தை 300 ரூபாவிற்கும் பின் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை விக்கிரகங்களையும் ஸ்தாபித்தார். இதன் பின் 1948ல் அந்தரித நிகழ்வை தொடர்ந்து ஒரு கும்பாவிஷேகம் நிகழ்ந்தது.

அதனை தொடர்ந்து வந்த தசாப்த்தத்தில் குறிப்பிடத்தகுந்த திருப்பணி வேலைகள் ஏதும் நடந்ததாக இல்லை. 1960ன் பிற் பகுதியிலே கோபுரவாசல் ஒன்று கட்ட எம் பெருமான் திருவுளம் கொண்டார். மணிய ஐயாவின் வடிவில் திருவருள் செயற்பட்ட்து. கோபுரம் கட்ட வேண்டும் என்று கதைத்தார். ஆனால் செயலுருப்பெற சில நாள் சென்றது. மன வேதனையடைந்த மணிய ஐயா இது பிள்ளையாருக்கு விருப்பம் இல்லையோ என்று சந்தேகம் கொண்டு திருவுளச் சீட்டு ஒன்றை எழுதி சந்நிதானத்தில் வைத்து அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்து விட்டது.உடனே பாென்னாலை சென்று அங்கு வேலை செய்து பாெண்டிருந்த வே. மாணிக்கம் அவர்களைக் கூட்டி வந்து பிள்ளையார் காேவில் காேபுரமும் கிருஷ்ணன் காேவிலில் மணிக்காேபுரமும் அமைக்க காேபுரத்திருப்பணியை ஆரம்பித்தார்.

விநாயக வழிபாட்டின் வளர்ச்சி[தொகு]

விநாயக வழிபாட்டின் வளர்ச்சி கி.பி. 6 ம் நூற்றாண்டளவில் புராணங்களின் செல்வாக்கினால் விரிந்து வளர்ச்சியடைந்த கணபதி உபநிடதம் ஏரம்ப உபநிடதம் கணபதியை மும்மூர்திகளுள் மேலான பிரம்மமாக காட்டின.கணபதிக்கு பல்வேறு வடிவங்களை முன்னோராகிய ரிஷிகள் காட்டினார். உ ச்சிட்ட கணபதி , மஹா கணபதி, ஊர்தத்துவ கணபதி, பிங்கள கணபதி, இலட்சுமி கணபதி என ஐந்து வடிவங்களை கொடுத்து வழிபடடனர். பார்க்கவ புராணம் சிந்தமணி விநாயகர், கஜநாத விநாயகர், விக்னவிநாயகர், மயூரேச விநாயகர், தூமகேது விநாயகர், கணேசர் , மஹோத்கட விநாயகர், உடுண்டி விநாயகர், வல்லபை விநாயகர் என ஒன்பது வடிவங்களை கொடுக்கின்றது.