கந்தர் கதிர்காமத்தம்பி உலகநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கந்தர் கதிர்காமத்தம்பி உலகநாதன் ஒரு ஈழத்து நாடக நடிகர். கனடாவில் 1991 ல் இருந்து ஓக்வில் ஒலிபரப்பு நிலையத்திலிருந்து வாரா வாரம ஒலிபரப்பான இளையபாரதியின் ”சங்கமம்” வானொலியில் ஒலிபரப்பான நகைச்சுவை வார நாடகத்தொடர் அவரது குறிப்பிடத்தக்க தோற்றம். பின் அது மேடை நாடகமாகவும் 1993 இல் நகைச்சுவைத் திரைப்படமாகவும் வெளியானது.

இணுவையூர் தீசன் என்ற பெயரில் இணுவில் கிராமத்தில் கலகலப்பு பத்தரிகையை 1970 ம் ஆண்டுப்பகுதியில் கையெழுத்துபிரதயை வெளியிட்ட உலகநாதன், தொடர்ந்து பாஸ்கரன். கண்ணன் குரு என்பவர்ளுடன் இணைந்து கலகலகலப்பு நகைச்சுவைப்பிரதியை அச்சேற்றி பிரசுரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1988 ல் கனடவுக்கு புலம்பெயர்ந்தார்.