கண்டலேறு அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டலேறு அணை என்பது கண்டலேறு ஆற்று நீர்ப் பாசனத்திற்கான கட்டப்பட்டது. கண்டலேறு ஆறு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் இங்கிருந்து சென்னைக்கு நீர் அளிக்கப்படுகிறது. ஸ்ரீசைலம் அணைக்கட்டின் வழியாக சென்னை சென்றடையும். தமிழக, ஆந்திர அரசுகளின் ஒப்பந்தத்தின்படி 12 டி.எம்.சி நீரை கிருஷ்ணா ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு அளிக்கப்படுகிறது. இதற்காக, கண்டலேறு அணை முதல் ஊத்துக்கோட்டைக்கு அருகில் சீரோ பாயின்ட்டு வரையும் (152 கி.மீ தொலைவு), ஊத்துக்கோட்டையில் இருந்து பூண்டி ஏரி வரையும் (25 கி. மீ தொலைவு) கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டலேறு_அணை&oldid=2223405" இலிருந்து மீள்விக்கப்பட்டது