எஸ். கே. வடிவேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். கே. வடிவேலு (பி: 1947) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். கம்பதாசன் எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்ட இவர் ஓர் அரசாங்க ஊழியராவார். அத்துடன் இவர் பினாங்கு செந்தமிழ்க் கலாநிலையத்தில் பயின்றவரும்கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1966 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் நிறையப் பக்திப் பாடல்களும், கவிதைகளும், கட்டுரைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "கொடிமலை அருளொளி முருகன் பாமாலை" (1972)
  • "திருமுருகன் இசைமாலை" (1975)
  • "மதுரை வீரன் அலங்காரப் பாமாலை" (1983, 1995, 1998)
  • "மணல்மேட்டு மாரியம்மன் புகழ்மாலை" (1994).

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • "செந்துறைக் கவிஞர்" விருது - செந்தமிழ்க் கலாநிலையம்.
  • மலேசிய அரசாங்க PBS விருது.
  • தமிழ் நேசன் பவுன் பரிசு உட்பட பல பரிசுகள் பெற்றுள்ளார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கே._வடிவேலு&oldid=3236576" இலிருந்து மீள்விக்கப்பட்டது