கோட்டை ஆருத்ரா கபாலீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எழுமாத்தூர் ஆருத்ரா கபாலீசுவரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோட்டை ஆருத்ரா கபாலீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் திருத்தொண்டீசுவரம் என்றழைக்கப்பட்டது. [1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 194 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°20'31.1"N, 77°43'25.3"E (அதாவது, 11.341960°N, 77.723695°E) ஆகும்.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக ஆருத்ரா கபாலீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி வாரணி அம்மாள் ஆவார். கோயிலின் மரம் வன்னி ஆகும். மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. [1]


மேற்கோள்கள்[தொகு]