என். எஸ். மணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என். எஸ். மணியம் (N. S. Manian) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மலாக்கா நாக மணியம் எனும் புனையப்பெயரில் எழுதிவரும் இவர் ஒற்றுமைத் துறை (துணை) அதிகாரியுமாவார். மேலும் இவர் வானொலியில் இரு மொழிகளிலும் அறிவிப்பாளராகவும், "மலேசிய நண்பன்" மலாக்கா மாநில நிருபராகவும், மேடை அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு நடிகரும் ஆவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் மலாய், தமிழ் இரு மொழிகளிலும் கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "நாகமணியம் கவிதைகள்" (புதுக்கவிதைகள்)

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • அரசாங்கத்தின் BCM, BKT, PJK விருதுகள்

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எஸ்._மணியம்&oldid=3369994" இலிருந்து மீள்விக்கப்பட்டது