எண்ணங்களை மேம்படுத்துங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்ணங்களை மேம்படுத்துங்கள் (Ennangalai Membaduthungal) என்பது அமெரிக்க எழுத்தாளர் எம்.ஆர்.காப்மேயர் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலாகும். பி.சி. கணேசன் மொழிபெயர்த்துள்ள இந்நூலில் 80 அத்தியாங்கள் உள்ளன. வெற்றியும் மகிழ்ச்சியும் உள்ளார்ந்த அமைதியையும் வழங்கக்கூடிய 80 வழிமுறைகள் பற்றி நூலில் கூறப்பட்டுள்ளன.[1] [2] கண்ணதாசன் பதிப்பகம் நூலை வெளியிட்டது.

புத்தக அறிமுகம்[தொகு]

ஒவ்வொரு சிறிய அத்தியாயமும் ஒரு மாறுபட்ட சிந்தனையை அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு கருத்தின் மீதும் சற்று வித்தியாசமான பார்வை செலுத்தப்பட்டு இருப்பதாகவும் இதை கருதலாம். வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த கருத்துகளே இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் அதற்கு முன் அத்தியாயத்துடனும் அல்லது அதைத் தொடரும் அத்தியாயத்துடனும் தொடர்பு கொண்டது அல்ல. புத்தகத்தில் உள்ள எந்தப் பகுதியினையும் நாம் தனிதனியாகப் படிக்கலாம். ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றியும் தனிதனியாகவும் சிந்திக்கலாம்.

முதலாம் வழிமுறை - உயரமாக நில்லுங்கள் என்பது ஆளுமையை உயர்த்திக்கொள்ளுங்தள் என்பதாகும். உடல் அளவில் மன அளவில் ஆன்மீக அளவில் என்ற முன்று நிலைகளில் உயரமாக நிற்கும் போது வாழ்க்கையில் ஏற்படும் சகலவற்றையும் சமாளிக்கின்ற தன்னம்பிக்கை திறமை நிதானம் ஆகிய பண்புகள் ஏற்பட்டு வாழ்க்கை பாதையில் கம்பீரமாக நடைபோட முடிகிறது. இரண்டாவது வழிமுறை பிரித்து வெற்றிபெறுங்கள் டாக்டர்.வில்லியம் ஆஸ்கர் சொல்லியுள்ள, ஒரு சமயத்தில் ஒரு நாள் வாழ்க்கை போதும்" என்கி்ன்ற கோட்பாட்டினை நாம் அனைவரும் அறிவோம். இன்றைய தினத்தை மட்டும் வாழக் கற்றுக் கொள்வோம். உடல், மனம், உணர்ச்சி ஆகியவற்றை திறமையாகப் பயன்படுத்தி, சுலபமாக, அமைதியாக, எடுத்துக்கொண்டே வேலைகளில் கவனம் செலுத்துகி்ன்ற மனப்பான்மை வந்துவிட்டால் வெற்றி என்பன போன்ற கருத்துகள் நூலில் இடம்பெற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "எண்ணங்களை மேம்படுத்துங்கள்". நூல் உலகம். https://www.noolulagam.com/tamil-book/8620/ennangalai-mempaduthungal-book-type-ulaviyal-by-p-c-ganesan/. பார்த்த நாள்: 24 December 2022. 
  2. "Ennangalai Mempaduthungal". www.goodreads.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.