எட்டிப்பட்டி தூவல் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எட்டிப்பட்டி தூவல் அருவி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் நடுப்பட்டியை அடுத்த எட்டிப்பட்டி என்ற மலையடிவார சிற்றூரில் உள்ள அருவி ஆகும்.[1]

ஊத்தங்கரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை எழில் வாய்ந்ததாக எட்டிபட்டி சிற்றூர் உள்ளது. இந்த சிற்றூரின் வழியாக தென்பெண்ணை ஆறு பாய்கிறது. பாறைகள் நிறைந்த இப்பகுதியில் இந்த அருவி கொட்டுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். பக். 127. 
  2. தினத்தந்தி (2021-10-25). "எட்டிப்பட்டி தூவல் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக அறிவிக்கப்படுமா?". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.