உலக சமாதானம் (நூல்)
வேதாத்திரி மகரிஷி அவர்கள் 1957ல் 'உலக சமாதானம்' என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார். மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் இந்த நூல் விளக்குகிறது[1]
இந்த நூல் உலகசமாதாத்திற்கான ஓர் திட்டமாகும்.இந்த திட்டம் உலக சமாதானத்திற்கான பல்வேறு சாத்தியக்கூறுகளையும், படிப்படியாக செயல்படுத்தப்பட வேண்டிய நடைமுறைகள், கூட்டுறவு செயல்பாடுகள் குறித்தும் விவரிக்கிறது.நூலுக்கு சிறப்புரை எழுதியது பரஞ்சோதி மகான்.
நூல் சிறப்பு[தொகு]
வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது 46 ஆம் வயதில் உலக அமைதிக்காக 'உலக சமாதானம் (World peace) என்ற 200 பாடல்கள் கொண்ட நூலை எழுதி 1957ல் வெளியிட்டார். இந்த நூலானது தமிழ் மற்றும் ஆங்கிலம் வழிப் பாடத்திட்டமாக்கப்பட்டு இன்று பல கல்லூரிகளில் உயர்கல்விக்கு வித்திட்டு இருக்கிறது. இவர் தனது வாழ்நாள் இறுதிவரை உழைத்து வெற்றி பெற்றார். இன்று பல பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு,மேல்பட்டப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.[2]
சான்றுகள்[தொகு]
இவற்றையும் காண்க[தொகு]
- வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 (நூல்)
- கடவுளும் கருமையமும் (நூல்)
- உண்மை நிலை விளக்கம் (நூல்)
- அருளருவி பகுதி 2 (நூல்)
- வேதாத்திரியம்
- அறிவுத் திருக்கோவில்
வெளி இணைப்புகள்[தொகு]
அறிவு திருக்கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளம்