உரிமரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரிமரம் என்பது கண்ணன் உரியில் வெண்ணெய் திருடிய கதை நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் திருவிழா விளையாட்டு. கண்ணன் பிறந்த நாளில் (கிருஷ்ண ஜெயந்தி) நடைபெறும். ஆடவர் இந்த விளையாட்டில் கலந்துகொள்வர்.

விளக்கெண்ணெய் தடவிய. வழுவழுப்பான மரத்தின் உச்சியில் வெண்ணெய் வைக்கப்பட்டிருக்கும். வழுக்கு மரத்தில் ஏறி வெண்ணெயை எடுத்துக்கொள்ளவேண்டும். ஏறுபவர் முகத்தில் தண்ணீர் அடிப்பர். இந்தத் தடையையும் மீறி ஏறவேண்டும்.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரிமரம்&oldid=2742029" இலிருந்து மீள்விக்கப்பட்டது