உபதேச மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உபதேச மாலை என்பது சிவஞான வள்ளல் பாடிய 20 நூல்களில் ஒன்று. இந்த நூலில் 100 வெண்பாக்கள் உள்ளன.

  • கொல்லா விரதம் சைவம் என இது குறிப்பிடுகிறது.
  • ’ஆசாரியன்’ என்னும் சொல்லை இந்த நூல் ‘ஆசாரிக்கும் தன்மை உடையவன்’ என விளக்குகிறது. ஆசாரித்தல் என்பது ஆசாரங்களைக் கடைப்பிடித்தல். ஆசாரம் என்பது வாழ்க்கைக்கு ஆசாக உள்ள பழக்க வழக்கங்கள். ஆசு என்பது தச்சர் மரப்பொருள்களை இணைக்கும்போது செங்கோணத்தில் அமையப் பயன்படுத்தும் ஆப்பு.
  • பற்று அற்று முத்தி பெற்றவர்கள் என இந்த நூல்
சுகன்
வாமதேவன்
துருவாசன்
காதி மகன்
விதுரன்
வெண்காடன்
மாறன்
பத்திரகிரி

ஆகியோரைக் குறிப்பிடுகிறது.

இது 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபதேச_மாலை&oldid=1146509" இலிருந்து மீள்விக்கப்பட்டது